search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Imsai Arasan"

    • நான் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னால் கலைஞர் நினைவிடம் சென்று வந்தேன்.
    • வரலாற்றில் இப்படி ஒரு மணிமண்டபத்தை கட்ட யாராலும் முடியாது. யாருக்கும் கிடையாது.

    சென்னை கிழக்கு மாவட்டம் கொளத்தூர் கிழக்கு பகுதி தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா சென்னை பெரவள்ளூர் அகரத்தில் நடந்தது. விழாவுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலை வகித்தார். இதில் நடிகர் வடிவேலு கலந்து கொண்டு பேசியதாவது:-

    நான் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னால் கலைஞர் நினைவிடம் சென்று வந்தேன். திராவிடம் என்றால் என்னவென்று கேட்பவர்கள் ஒரே ஒருமுறை கலைஞர் நினைவிடம் சென்று பாருங்கள். உள்ளே போனால், அங்கிருக்கும் காட்சிகளை கண்டால், எனக்கு மூச்சு நிற்கும் அளவுக்கு கருணாநிதியின் வரலாறை முதலமைச்சர் மிகச்சிறந்த அளவில் உருவாக்கியுள்ளார். வரலாற்றில் இப்படி ஒரு மணிமண்டபத்தை கட்ட யாராலும் முடியாது. யாருக்கும் கிடையாது.

    நான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் என்ற போதிலும் கலைஞர் கருணாநிதியின் தீவிர பக்தன், தீவிர விசுவாசி. எம்.ஜி.ஆரை நான் வெளியே இருந்துதான் பார்த்திருக்கிறேன். எம்.ஜி.ஆர்- கருணாநிதி 2 பேரும் நண்பர்கள் தான். ஆனால் கலைஞரின் கதை- வசனத்தில் நடித்திருக்கிறேன். அவருடன் அமர்ந்து பேசியிருக்கிறேன். பழகியிருக்கேன். நிறைய விஷயங்களில் கலைஞர் எனக்கு தைரியம் சொல்லுவார். திரை உலகத்தை அவர் எந்தளவுக்கு நேசித்தார் என்பது எல்லா மக்களுக்கும் தெரியும்.

    23 ஆம் புலிகேசி படத்தை என்னால் ரிலீஸ் செய்ய முடியவில்லை. கலைஞரின் உதவியாளர் சண்முகநாதனுக்கு போன் செய்து கலைஞரிடம் பேச வேண்டும் என சொன்னேன். உடனே என்ன வென்று பேசினார். நான் உங்களை பார்க்க வேண்டுமென சொன்னேன். எதுவும் பிரச்சினையா? என கருணாநிதி கேட்டார். புலிகேசி படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டேன் என்று சொல்கிறார்கள். ராஜா குதிரை போக விடமாட்டேன் என்று சொல்கிறார்கள். ஏதோ புளூ கிராஸ் அமைப்பில் பஞ்சாயத்து ஆகிவிட்டது என நான் விஷயத்தை சொன்னேன். அதற்கு அவர் என்னிடம், 'ராஜா குதிரையில் போகாம குவாலிஸ்லயா போவார்?' என பதிலடியாக பேசினார்.

    பின்னர் நான் கருணாநிதியை சந்திக்க நேரில் சென்றேன். கிட்டதட்ட 22 நிமிடம் இதற்காக பேசினார். பின்னர் உதவியாளர் சண்முகநாதனை கூப்பிட்டு ஆ.ராசாவுக்கு போன் செய்ய சொன்னார். அவரிடம், 'ராஜா குதிரை போகக்கூடாதுன்னு சொல்கிறார்களாம். உடனே நீ போற மாதிரி ஏற்பாடு பண்ணிரு. நீயும் ராஜா தானே'என கலாய்த்து பேசிவிட்டு போனை வைத்து விட்டார்.

    அதன்பின்னர் என்னை பார்த்து, 'இப்படித்தான் உன் எம்.ஜி.ஆர்.'என பேச ஆரம்பித்ததும் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இப்படித்தான் எம்.ஜி.ஆர். நடித்த காஞ்சித்தலைவன் படம் பண்ணும்போது அதில் புலிகேசி மன்னனாக எம்.ஜி.ஆர். வருவார். அப்போதும் இதே மாதிரி பிரச்சினை வந்தது. என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. காட்சியை தூக்கி விட்டோம். அதன்பிறகு இப்போது இந்த பட பிரச்சினை வந்துள்ளது. கண்டிப்பாக இந்த படம் வெளியாகும் என தைரியம் கொடுத்தார். ஒருவாரத்தில் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தை ரிலீஸ் செய்ய வைத்தவர் கலைஞர் கருணாநிதி தான்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இம்சை அரசன் படப் பிரச்சனையால் மற்ற படங்களில் நடிக்க முடியாமல் இருக்கும் வடிவேலு, ஏற்கனவே ஒப்பந்தமாகியிருக்கும் படத்திலும் நடிக்க முடியாததால் இயக்குநர் சுராஜ் வடிவேலுவுக்காக காத்திருக்கிறார் #ImsaiArasan #Vadivelu #Suraj
    ‌ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட படம் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’. படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே, படக்குழுவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வடிவேலு படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை.

    இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தது படக்குழு. இது தொடர்பாக வடிவேலு எந்த விளக்கமும் அளிக்காமல் தாமதப்படுத்தியதால், ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தின் பிரச்சினை முடியும் வரை, வேறு எந்தவொரு படத்திலும் வடிவேலுவை ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தியது தயாரிப்பாளர் சங்கம்.



    இதன் காரணமாக வடிவேலுவிடம் கதை சொல்லி ஒப்பந்தம் செய்த தயாரிப்பாளர்கள் இந்த பிரச்சினைக்கு எப்போது முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். முக்கியமாக இயக்குனர் சுராஜ் நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருக்கிறார். 

    விமல், பார்த்திபன், வடிவேலு நடிக்க இவர் இயக்கும் படத்தின் முதல்கட்டப் பணிகள் அனைத்துமே முடிக்கப்பட்டு படப்பிடிப்பு தொடங்க தயார் நிலையில் இருக்கிறது. தயாரிப்பாளர் சங்கத்தில் இன்னும் வடிவேலு பிரச்சினை தீராததால், தன் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க முடியாமல் காத்துக் கொண்டிருக்கிறார். #ImsaiArasan #Vadivelu #Suraj

    ×