search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "impact sun"

    வெயிலின் தாக்கத்தால் நெல்லிக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் விருதலைப்பட்டி, குட்டம், சுக்காம்பட்டி, ரங்கநாதபுரம், கருக்காம் பட்டி, கோடாங்கிபட்டி, சாலையூர் 4 ரோடு, எரியோடு ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல்லிக்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    மழை இல்லாததாலும் கடுமையான வெயிலின் தாக்கத்தாலும் நெல்லிக்காய் வரத்து குறைந்துள்ளது. இதனால் மார்க்கெட்டில் ரூ.40 முதல் ரூ.60 வரை கிலோவுக்கு விலை உயர்ந்துள்ளது.

    விலை உயர்வு மகிழ்ச்சி அளித்தாலும் மழை குறைந்ததால் ஏக்கருக்கு 200 கிலோ நெல்லிக்காய் எடுத்தாலும் பெரிதாக சேதம் ஏற்பட வில்லை என்பதும் நெல்லிக்காய்கள் வெயிலில் வெம்பி போவதால் சேதம் அடைந்து வருவதாகவும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    மருத்துவ குணம் கொண்ட பெரிய நெல்லிக்காய்கள் பல்வேறு ஊர்களில் இருந்து விவசாயிகளால் வாங்கி செல்லப்படும்.

    ஆனால் தற்போது நெல்லிக்காய் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு அதிக நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் குளிர்பதன கிடங்கி அமைக்கவும், ஒப்பந்த அடிப்படையில் காய்களை வாங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×