search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ICU Ward"

    உத்தரப்பிரதேசம் மாநிலம், பரேலி நகரில் விஷக்கடிக்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட 17 வயது பெண்ணை 4 பேர் சேர்ந்து கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #BareillyTeen
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம், பரேலி நகரில் உள்ள மருத்துவமனைக்கு கடந்த மாதம் 30-ம் தேதி பூச்சிக்கடியால் பாதிக்கப்பட்ட 17 வயது இளம்பெண் சிகிச்சைக்காக வந்திருந்தார். அவர் உடலில் விஷத்தின் பாதிப்பு அதிகமாக இருந்ததால் அங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

    மறுநாள் 31-ம் தேதி பின்னிரவு அந்த மருத்துவமனையில் கம்பவுன்டராக பணிபுரியும் சுனில் ஷர்மா மற்றும் மேலும் 3 பேர் தன்னை கற்பழித்து விட்டதாக பொது வார்டுக்கு மாற்றப்பட்ட பின்னர் தனது பெற்றோரிடம் பாதிக்கப்பட்ட இளம்பெண் தெரிவித்தார்.

    அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அந்த இளம்பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.  #BareillyTeen 
    ×