search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ICC Test Championship"

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என நியூசிலாந்து கைப்பற்றியது.
    • இதன்மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் நியூசிலாந்து முதல் இடத்திற்கு முன்னேறியது.

    துபாய்:

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

    இந்நிலையில், இந்த தொடர் முடிவடைந்ததும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டது.

    அதன்படி, புள்ளிப் பட்டியலில் நியூசிலாந்து அணி முதல் இடத்திற்கு முன்னேறியது. அந்த அணி 75 சதவீதத்துடன் முதல் இடத்தில் உள்ளது.

    ஆஸ்திரேலியா (55%) 2வது இடத்திலும், இந்தியா (52.77%) 3வது இடத்திலும், வங்காளதேசம் (50%) 4வது இடத்திலும் உள்ளன.

    பாகிஸ்தான் (36.66%), வெஸ்ட் இண்டீஸ் (33.33%), இங்கிலாந்து (25%), தென் ஆப்பிரிக்கா (25%), இலங்கை (0%) ஆகிய அணிகள் 5 முதல் 9 இடங்களில் உள்ளன.

    • அதிரடியாக விளையாடிய குசால் மெண்டிஸ் 83 பந்தில் 16 பவுண்டரிகளுடன் 87 ரன்களை விளாசினார்.
    • நியூசிலாந்து தரப்பில் சவுத்தி 3 விக்கெட்டுகளையும் ஹென்றி, பிரேஸ்வெல் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முதல் அணியாக ஆஸ்திரேலியா முன்னேறிய நிலையில் 2-வது அணியாக முன்னேற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இன்று அகமதாபாத்தில் தொடங்கி நடந்துவரும் 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஜெயித்தால் இறுதி போட்டிக்கு முன்னேறிவிடும்.

    ஒருவேளை இந்திய அணி இந்த போட்டியில் தோற்று, இலங்கை அணி நியூசிலாந்தை 2-0 என டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் செய்தால் இலங்கை அணி இறுதி போட்டிக்கு முன்னேறும். இந்திய அணி இந்த டெஸ்ட்டில் தோற்று, இலங்கை அணி நியூசிலாந்திடம் ஒரு டெஸ்ட்டில் தோற்றால், இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறிவிடும்.

    இந்நிலையில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதே நாளில்தான் இலங்கை - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியும் தொடங்கியது.

    இந்த டெஸ்ட்டில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியின் தொடக்க வீரர் ஒஷாடா ஃபெர்னாண்டோ 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும் மற்றொரு தொடக்க வீரரும் கேப்டனுமான திமுத் கருணரத்னே அரைசதம் அடித்தார். ஆனால் 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 3-ம் வரிசையில் இறங்கிய குசால் மெண்டிஸ் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். அதிரடியாக விளையாடிய குசால் மெண்டிஸ் 83 பந்தில் 16 பவுண்டரிகளுடன் 87 ரன்களை விளாசினார்.

    அதன்பின்னர் ஆஞ்சலோ மேத்யூஸ் 47 ரன்களும், தினேஷ் சண்டிமால் 39 ரன்களும் அடித்தனர். டிக்வெல்லா 7 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 305 ரன்களை எடுத்துள்ளது.

    நியூசிலாந்து தரப்பில் சவுத்தி 3 விக்கெட்டுகளையும் ஹென்றி, பிரேஸ்வெல் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    ×