search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "husband sister"

    வேலூரில் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்த தங்கையின் கணவரை எரித்துக்கொன்ற தொழிலாளிக்கு வேலூர் கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.
    வேலூர்:

    வேலூர் வசந்தபுரத்தை சேர்ந்தவர் ஜெயகரன் என்கிற ஐசக் (வயது 27). கூலித்தொழிலாளி. இவருடைய தங்கை ஆஷாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த சங்கர் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சிலநாட்களிலேயே சங்கர் தினமும் மது குடித்துவிட்டு வந்துள்ளார்.

    அப்போது தனது மனைவி ஆஷாவை அவருடைய தாய்வீட்டிற்கு சென்று பணம் வாங்கிவரும்படி கூறி தொந்தரவு செய்து வந்தார். இதனால் ஆஷா அடிக்கடி தனது தாய்வீட்டிற்கு சென்றுள்ளார். பெற்றோர் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். பணம் கேட்டு தங்கையை தொந்தரவு செய்ததால் சங்கர்மீது, ஜெயகரனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

    இதனால் சங்கரை கொலைசெய்ய ஜெயகரன் திட்டமிட்டுள்ளார். அதன்படி கடந்த 24.2.2017 அன்று தனது தங்கை கணவரை கொலைசெய்ய அங்குள்ள பிள்ளையார் கோவில் அருகில் ஜெயகரன் மறைந்திருந்தார். அப்போது அந்தவழியாக வந்த சங்கர் மீது ஜெயகரன் பெட்ரோல் பாக்கெட்டை வீசி தீ வைத்தார்.

    இதில் உடல்கருகிய சங்கர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயகரன் என்கிற ஐசக்கை கைது செய்தனர்.

    மேலும் இந்த வழக்கு விசாரணை வேலூர் கூடுதல் மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அரசு வழக்கறிஞர் அ.கோ.அண்ணாமலை இந்த வழக்கில் ஆஜரானார். வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி குணசேகரன் நேற்று தீர்ப்புகூறினார்.

    அதில் ஜெயகரன் என்கிற ஐசக்கிற்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தார். அதைத்தொடர்ந்து ஜெயகரன் வேலூர் மத்தியசிறையில் அடைக்கப்பட்டார்.
    ×