search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Husband committed suicide"

    • நேற்று முன்தினம் இரவு தனது கணவரை ஜவுளிக்கடைக்கு துணி எடுக்க தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார்.
    • அதற்கு அவர் மறுத்துவிட்டு குடி போதையில் வீட்டிலேயே உறங்கி விட்டார்.

    தேனி:

    தேனி அல்லிநகரம் பொம்மையகவுண்டன் பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 33). கூலித் தொழிலாளி. இவருக்கும் சங்கீதா (27) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. சுரேஷ் குடி பழக்கத்துக்கு அடிமையானவர். நேற்று முன்தினம் இரவு தனது கணவரை ஜவுளிக்கடைக்கு துணி எடுக்க தன்னுடன் வருமாறு சங்கீதா அழைத்துள்ளார்.

    அதற்கு சுரேஷ் மறுத்து விட்டார். மேலும் குடி போதையில் வீட்டிலேயே உறங்கி விட்டார். இதனால் சங்கீதா கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். போதை தெளிந்து எழுந்த சுரேஷ் மனைவி கோபித்துச் சென்றதால் தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அல்லிநகரம் போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    போடி மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் மொக்ைக (53). கூலித் தொழிலாளி. இவ ருக்கு கடந்த சில மாதங்க ளாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. இதனால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சினை ஏற்பட்டதால் கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
    • மனைவி பிரிந்து சென்றதால் விரக்தி அடைந்த கிருஷ்ணமூர்த்தி வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வேடசந்தூர்:

    வேடசந்தூர் அருகே குட்டம் ஊராட்சி தாசிரிபட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது30). சரக்கு வாகனம் வைத்து ஓட்டி வந்தார். இவரது மனைவி வினோதினி (25). இவர்களுக்கு 8 மாத பெண் குழந்தை உள்ளது.

    வேடசந்தூரில் குடும்பத்துடன் தங்கி இருந்தார். கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சினை ஏற்பட்டது. இதனால் வினோதினி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    மனைவி பிரிந்து சென்றதால் விரக்தி அடைந்த கிருஷ்ணமூர்த்தி வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×