search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Husband arrested for"

    • ஆத்திரம் அடைந்த செந்தில்குமார் கத்திரிகோலால் பிரியாவை குத்தினார்.
    • இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் பெரியவலசு கொத்துக்காரர் வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (38). மரக்கட்டில், மேஜைகளுக்கு பாலீஸ் போடும் தொழிலாளி. இவரது மனைவி பிரியா (22). தறிபட்டறை தொழிலாளி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

    செந்தில்குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 மாதமாக பிரியா பிரிந்து வந்து குழந்தைகளுடன் வீரப்பன்சத்திரம் பாரதி தியேட்டர் அருகே வாழ்ந்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவ த்தன்று செந்தில்குமார், பிரியா வசித்து வரும் வீட்டிற்கு சென்று தன்னுடன் வாழ வருமாறு அழைத்துள்ளார். இதற்கு பிரியா மறுப்பு தெரிவித்ததால் செந்தில் குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    இதில் ஆத்திரம் அடைந்த செந்தில்குமார் கத்திரிகோலால் பிரியாவின் வயிறு, கழுத்து ஆகிய பகுதிகளில் குத்தினார். பிரியா வலியால் கூச்சல்போட அக்கம் பக்கத்தினர் வருவதை பார்த்து செந்தில்குமார் அங்கிருந்து தப்பி ஓடினார்.

    ரத்த வெள்ளத்தில் துடித்த பிரியாவை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    ×