என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "human hand"
- மனித கை ஒன்று கிடப்பதாக கம்பனேரி புதுக்குடி கிராம நிர்வாக அலுவலர் ராமச்சந்திரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
- அந்த கை ஒரு பெண்ணின் வலது கை என்பது தெரியவந்தது.
கடையநல்லூர்:
கடைய நல்லூர் தாலுகா அச்சம்பட்டி கிராமத்தில் குளம் உள்ளது. இந்த குளத்திற்கு தென்புறத்தில் சண்முகம் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது.
மனித கை
அந்த நிலத்தில் மனித கை ஒன்று கிடப்பதாக கம்பனேரி புதுக்குடி கிராம நிர்வாக அலுவலர் ராமச்சந்திரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்.
அங்கு ஒரு கை வெட்டப்பட்டு கிடந்தது. அவர் கடையநல்லூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர்.
விசாரணை
அப்போது அந்த கை ஒரு பெண்ணின் வலது கை என்பது தெரியவந்தது. மேலும் அழுக தொடங்கிய நிலையில் அந்த கை இருந்தது. உடனே போலீசார் அந்த கையை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து அந்த கை யாருடையது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்