search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Housing belt"

    • திருநாகேஸவரம் சன்னாபுரம் கிராமத்தில் பொது மக்கள் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • பட்டாவிற்காக பலபோராட்டங்களை நடத்தி வந்தனர்.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் திருநாகேஸவரம் சன்னாபுரம் கிராமத்தில் உள்ள மணல் மேட்டு தெரு, சிவன் திருமஞ்சன வீதி, பனந்தோப்பு தெற்கு தெரு,மேல தெரு, சிவன் சன்னதி மேல மட விளாகம், கீழ மட விளாகம், தெற்கு மட விளாகம்,வடக்கு மட விளாகம், தோப்பு தெரு, நேதாஜி தெரு,எடத்தெரு, செட்டி தெரு, உப்பிலியப்பன் கோவில் திருமஞ்சன வீதி, சந்தன மாரியம்மன்கோவில் தெரு, பழைய செட்டி தெரு, புளியந்தோப்பு, பழைய சேச தெரு, பழைய குடியான தெரு, உப்பிலியப்பன்கோவில் நான்கு வீதிகள் ஆகிய பகுதிகளில் சுமார் 2,000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இவர்களுக்கு இது வரை வீட்டு மனை பட்டா வழங்கவில்லை என்று கூறப்பட்ட நிலையில் அவர்கள் பட்டாவிற்காக பலபோராட்டங்களை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் மேலவீதியில் அரசு பட்டா வழங்க வேண்டும் என கூறி, நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கும்பகோணம் தாசில்தார் வெங்கடேசன், திருவிடைமருதுார் போலீஸ் துணை சூப்பிரண்டு, ஜாபர் சித்திக் ஆகியோர் திருநாகேஸ்வரம் சன்னாபுரம் குடியிருப்போர் சங்கத் தலைவர் ஆறுமுகம் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது, வரும் 20ம் தேதி தாலுகா அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என அதிகாரிகள் உத்தரவாதம் அளித்தனர். இதனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • ஒரே நாளில் 1,055 பேருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாவுக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.
    • பள்ளிக் கல்வித் துறை அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்று ரூ. 4.12 கோடி மதிப்பிலான விலையில்லா வீட்டு மனை பட்டாவுக்கான ஆணைகளை வழங்கினாா்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் ஒரே நாளில் 1,055 பேருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாவுக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

    இவ்விழாவில் பள்ளிக் கல்வித் துறை அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்று, தஞ்சாவூா் வட்டத்தைச் சோ்ந்த 150 பேருக்கும், திருவையாறு வட்டத்தைச் சோ்ந்த 59 பேருக்கும், ஒரத்தநாடு வட்டத்தைச் சோ்ந்த 70 பேருக்கும், பூதலூா் வட்டத்தைச் சோ்ந்த 93 பேருக்கும், பட்டுக்கோட்டை வட்டத்தைச் சோ்ந்த 200 பேருக்கும், பேராவூரணி வட்டத்தைச் சோ்ந்த 247 பேருக்கும், பாபநாசம் வட்டத்தைச் சோ்ந்த 95 பேருக்கும், கும்பகோணம் வட்டத்தைச் சோ்ந்த 63 பேருக்கும், திருவிடைமருதூா் வட்டத்தைச் சோ்ந்த 78 பேருக்கும் என மொத்தம் 1,055 பேருக்கு ரூ. 4.12 கோடி மதிப்பிலான விலையில்லா வீட்டு மனை பட்டாவுக்கான ஆணைகளை வழங்கினாா்.

    இவ்விழாவில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திசேகரன், (திருவையாறு), டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூா்), மேயா் சண். ராமநாதன், மாநகராட்சி ஆணையா் சரவணகுமாா், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் உஷா புண்ணியமூா்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.

    • என்.எல்.சி. நிறுவனத்தில் நெ ய்வேலி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று பா.ம.க. கூட்டத்தில் தீர்மானம் ஏற்கப்பட்டது
    • என்எல்சி நிறுவனத்தில் சுற்றியுள்ள கிராமப்புற படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்.

    கடலூர்:

    பாட்டாளி மக்கள் கட்சியின் நெய்வேலி வடக்கு ஒன்றிய பொதுக்குழு கூட்டம் வடக்குத்து திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார்.ஒன்றிய தலைவர் தவநாதன் வரவேற்புரை ஆற்றினார்.

    சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் என்ஜினியர் ரவிச்சந்திரன், மாவட்ட அமைப்பு செயலாளர் கயல்ராஜன், மாவட்ட பசுமை தாயக செயலாளர் ராஜசேகர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்டாலின், முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் நடராஜன், நெய்வேலி நகர செயலாளர் சார்லஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் கூட்டத்தில் முன்னாள் ஒன்றிய தலைவர் முத்துராமன், ஒன்றிய இளைஞர் சங்க தலைவர் வேலு, ஒன்றிய இளைஞர் சங்க செயலாளர் பாலவிஜய், மாணவர் சங்க நிர்வாகிகள் ராஜசிம்மன், தமிழ்ச்செல்வன், குணசேகரன், ஒன்றிய துணை செயலாளர் சரவணன், ஒன்றிய துணைத்தலைவர் இந்திரஜித், இளைஞர் சங்க நிர்வாகிகள் பாபு கனேசன், மாயகிருஷ்ணன், முருகானந்தன், மணிகண்டன், உள்ளிட்ட பா.ம.கவினர் பலர் கலந்து கொண்டனர் ஒன்றிய பொருளாளர் மோட்சராக்கினி நன்றி கூறினார்.

    கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன நெய்வேலி வடக்கு ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சி கொடியை ஏற்றுவது எனவும் நெய்வேலி வடக்கு ஒன்றியம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் பிரச்சாரம் செய்வது.

    என்எல்சி நிறுவனத்தில் சுற்றியுள்ள கிராமப்புற படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்.என்.எல்.சி. மாற்று குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு என்எல்சி நிறுவனம் உடனே வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் விக்கிரவாண்டி -தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை பணி நிறுத்தப்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு அதிகமாக உள்ளது எனவே விரைவில் சாலை அமைக்கும் பணியை முடிக்க வேண்டும் இல்லையென்றால் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக போராட்டம் அறிவிக்கப்படும்உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

    ×