search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பா.ம.க.  கூட்டத்தில் தீர்மானம்: என்.எல்.சி. நிறுவனத்தில் நெ ய்வேலி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு  வழங்க வேண்டும்
    X

    கடலூரில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் வக்கீல் சந்திரசேகரன் பேசினார். அருகில் மாவட்ட தலைவர் கலையரசன் உள்ளார்.

    பா.ம.க. கூட்டத்தில் தீர்மானம்: என்.எல்.சி. நிறுவனத்தில் நெ ய்வேலி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்

    • என்.எல்.சி. நிறுவனத்தில் நெ ய்வேலி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று பா.ம.க. கூட்டத்தில் தீர்மானம் ஏற்கப்பட்டது
    • என்எல்சி நிறுவனத்தில் சுற்றியுள்ள கிராமப்புற படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்.

    கடலூர்:

    பாட்டாளி மக்கள் கட்சியின் நெய்வேலி வடக்கு ஒன்றிய பொதுக்குழு கூட்டம் வடக்குத்து திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார்.ஒன்றிய தலைவர் தவநாதன் வரவேற்புரை ஆற்றினார்.

    சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் என்ஜினியர் ரவிச்சந்திரன், மாவட்ட அமைப்பு செயலாளர் கயல்ராஜன், மாவட்ட பசுமை தாயக செயலாளர் ராஜசேகர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்டாலின், முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் நடராஜன், நெய்வேலி நகர செயலாளர் சார்லஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் கூட்டத்தில் முன்னாள் ஒன்றிய தலைவர் முத்துராமன், ஒன்றிய இளைஞர் சங்க தலைவர் வேலு, ஒன்றிய இளைஞர் சங்க செயலாளர் பாலவிஜய், மாணவர் சங்க நிர்வாகிகள் ராஜசிம்மன், தமிழ்ச்செல்வன், குணசேகரன், ஒன்றிய துணை செயலாளர் சரவணன், ஒன்றிய துணைத்தலைவர் இந்திரஜித், இளைஞர் சங்க நிர்வாகிகள் பாபு கனேசன், மாயகிருஷ்ணன், முருகானந்தன், மணிகண்டன், உள்ளிட்ட பா.ம.கவினர் பலர் கலந்து கொண்டனர் ஒன்றிய பொருளாளர் மோட்சராக்கினி நன்றி கூறினார்.

    கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன நெய்வேலி வடக்கு ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சி கொடியை ஏற்றுவது எனவும் நெய்வேலி வடக்கு ஒன்றியம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் பிரச்சாரம் செய்வது.

    என்எல்சி நிறுவனத்தில் சுற்றியுள்ள கிராமப்புற படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்.என்.எல்.சி. மாற்று குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு என்எல்சி நிறுவனம் உடனே வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் விக்கிரவாண்டி -தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை பணி நிறுத்தப்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு அதிகமாக உள்ளது எனவே விரைவில் சாலை அமைக்கும் பணியை முடிக்க வேண்டும் இல்லையென்றால் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக போராட்டம் அறிவிக்கப்படும்உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

    Next Story
    ×