search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hospital employee"

    • புதுவை அருகே கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் அட்டெண்டராக வேலை செய்து வருகிறார்.
    • திருவிழாவில் பொதுமக்களின் வரிப்பணத்தை அய்யனா ரப்பன் முறைகேடு செய்து வருவதாக சரண்ராஜ் என்பவர் அருள்ராஜியிடம் கூறினார் என்று அய்யனாரப்பனுக்கு தெரியவந்துள்ளது.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பத்தை அடுத்த மணவெளி தண்ணீர் தொட்டி வீதியை சேர்ந்தவர் அருள்ராஜ் (வயது 37) இவர் கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் அட்டெண்டராக வேலை செய்து வருகிறார்.

    மேலும் மணவெளி பகுதியில் உள்ள அரியாங் குப்பம் கொம்யூன் பஞ்சா யத்து பராமரிப்பில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தை குத்தகை மூலம் குடிநீர் விநியோகம் செய்து வந்தார்.

    ஏற்கனவே அதே பகுதியை சேர்ந்த அய்யனாரப்பன் என்பவரும் சுத்திகரிப்பு நிலையத்தை ஏலம் எடுத்து விற்பனை செய்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

    இந்த நிலையில் மண வெளி முத்துமாரியம்மன் கோவில் கூட்டம் நடந்துள்ளது. திருவிழாவில் பொதுமக்களின் வரிப்பணத்தை அய்யனா ரப்பன் முறைகேடு செய்து வருவதாக சரண்ராஜ் என்பவர் அருள்ராஜியிடம் கூறினார் என்று அய்யனாரப்பனுக்கு தெரியவந்துள்ளது.

    இதனால் ஆத்திரமடைந்த அய்யனாரப்பன் அப்பகுதி யைச் சேர்ந்த அருள்ராஜை அசிங்கமாக திட்டி கையால் தாக்கி உள்ளார். பின்னர் நேற்று இரவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சேதப்படுத்தி அங்கிருந்த கேமராவையும் உடைத்துள்ளார்.

    மேலும் இரும்பு கம்பி யால் கொலை செய்து விடுவேன் என அருள்ராஜ் க்கு மிரட்டல் விடுத்தார். இது சம்பந்தமாக அரியாங்

    குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரி வித்தார். போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் முருகானந்தம், உதவி சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி ஆகியோர் வழக்கு பதிவு செய்து அய்யனாரப்பனை கைது செய்தனர்.

    • மோட்டார் சைக்கிள் தடுப்பு கட்டையில் மோதிய தில் அரசு ஆஸ்பத்திரி ஊழியர் பலியானார்.
    • இவர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.

    புதுச்சேரி:

    மோட்டார் சைக்கிள் தடுப்பு கட்டையில் மோதிய தில் அரசு ஆஸ்பத்திரி ஊழியர் பலியானார்.

    புதுவை சாரம் வெங்கடேஸ்வராநகர் அவ்வை வீதியை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி. இவர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு வானொலி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    சம்பவத்தன்று பணியில் இருந்த தட்சணாமூர்த்தி டீ குடிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் செஞ்சி சாலை வழியே சென்றார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க தட்சணாமூர்த்தி மோட்டார் சைக்கிளை திருப்பினார்.

    இதில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் அருகில் இருந்த தடுப்பு கட்டையில் மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்ட தட்சணாமூர்த்தி தலையில் பலத்த காயமடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தட்சணாமூர்த்தி இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் புதுவை போக்குவரத்து உதவி சப்-இன்ஸ்பெக்டர் வேணுகோபால் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மோட்டார்சைக்கிள் மீது கார் உரசியதால் ஏற்பட்ட தகராறில் மருத்துவமனை ஊழியரை தள்ளிவிட்டதால் லாரி மோதி அவர் பலியானார்.
    பூந்தமல்லி:

    தாம்பரத்தை அடுத்த நடுவீரப்பட்டு, ராம்ஜி நகரை சேர்ந்தவர் சண்முகம் (வயது 42). தாம்பரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று மாலை அவர் குன்றத்தூர் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றார். பெரியார் நகர் பஸ் நிலையம் அருகே வந்த போது அவ்வழியே சென்ற கால்டாக்சி ஒன்று சண்முகத்தின் மோட்டார் சைக்கிள் மீது லேசாக உரசியது.

    இதில் அவர் தடுமாறி கீழே விழுந்தார். இதனால் சண்முகத்துக்கும், கால் டாக்சி டிரைவர் மாங்காட்டை சேர்ந்த அப்துல் கரீமுக்கும் தகராறு ஏற்பட்டது. இதனை கண்டு அங்கு திரண்ட அப்பகுதி மக்கள் 2 பேரையும் சமாதானம் செய்தனர்.

    அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் சண்முகத்தை தள்ளியதாக தெரிகிறது. இதில் நிலைகுலைந்த அவர் சாலையோரத்தில் தடுமாறி நின்றார். அந்த நேரத்தில் குன்றத்தூர் நோக்கி சென்ற லாரி சண்முகம் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்து லாரி டிரைவர் மகாதேவன், கால் டாக்சி டிரைவர் அப்துல் கரீம் ஆகியோரிடம்விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கூட்டத்தில் சமாதானம் பேசிய போது சண்முகத்தை தள்ளி விட்டது யார் என்றும் விசாரணை நடக்கிறது. #tamilnews
    ×