என் மலர்
நீங்கள் தேடியது "Horses destroying agricultural crops"
- உழவர் சந்தைகளில் விவசாயிகள் தயாரிக்கும் கீரை சூப்புகளை விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும்.
- விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சாப்பிட்டு விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது.
கோவை
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் சமீரன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான விவசாயிகள், விவசாய சங்கங்கள், விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோவை மாவட்ட தலைவர் பழனிச்சாமி கூறியதாவது:-
கிராமங்களில் உற்பத்தியாகும் இயற்கையுடன் கூடிய முருங்கைக்கீரை, புதினா, பிரண்டை, வல்லாரை, முடக்க த்தான் போன்ற கீரைகளில் இருந்து கலப்படம் இல்லாமல் விவசாயிகள் இயற்கை முறையில் சூப் தயாரித்து வருகின்றனர்.
தொண்டாமுத்தூர் பகுதிகளில் தமிழக அரசு மூலம் புத்துயிர் பெற்று வரும் உழவர் சந்தைகளில் இந்த வகை சூப் விற்பனை செய்யவும், குறிப்பாக ஆர். எஸ்.புரம் மற்றும் பிற உழவர் சந்தைகளில் விவசாயிகள் தயாரிக்கும் மூலிகை தன்மை கொண்ட கீரை சூப்புகளை விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும்.
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் வேணுகோபால் கூறியதாவது:- பெரியநாயக்கன்பாளையம் வட்டாரம் பகுதிகளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குதிரைகள் விவசாய நிலங்களில் சுற்றித் திரிகிறது.
இவை விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சாப்பிட்டு விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக சோமயம்பாளையம் பஞ்சாயத்தை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். கலெக்டர் இதனை தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






