என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Honduras plane crash"

    • ஐந்து பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
    • ஹோண்டுரான் சிவில் ஏரோநாட்டிக்ஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது.

    ஹோண்டுராஸ் கடற்கரையில் ஒரு சிறிய வணிக விமானம் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் பிரபல கரிஃபுனா இசைக்கலைஞர் உட்பட 12 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கடந்த திங்கள் கிழமை இரவு ரோட்டன் தீவில் இருந்து லா சீபாவின் பிரதான நிலப்பகுதிக்கு செல்லும் வழியில் லான்சா ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கடலில் விழுந்தது. அதில் 17 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர், அவர்களில் ஐந்து பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    விமானம் முழு உயரத்தை அடையத் தவறிவிட்டதாகவும், கடலில் விழுந்ததும் விரைவாக மூழ்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். உள்ளூர் மீனவர்கள் உயிர் பிழைத்தவர்களை மீட்டனர். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக ஹோண்டுரான் சிவில் ஏரோநாட்டிக்ஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது.

    பாதிக்கப்பட்டவர்களில், முன்னாள் காங்கிரஸ் உறுப்பினரும், ஆப்பிரிக்க மற்றும் பூர்வீக இனக்குழுவைச் சேர்ந்தவருமான ஆரேலியோ மார்டினெஸ் சுவாசோவும் ஒருவர். மார்டினெஸ் சுவாசோ அமெரிக்க குடியுரிமையையும் பெற்றிருந்தார். அவரது பிரதிநிதியான பிரெஞ்சு குடிமகனான ஹெலீன் ஓடில் குய்வார்ச், உயிர் பிழைத்தவர்களில் ஒருவர்.

    உயிரிழந்தவர்களின் உடல்கள் ரோட்டனில் இருந்து சான் பெட்ரோ சூலாவில் உள்ள பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டன.

    ஹோண்டுராஸ் நாட்டில் குட்டி விமானம் கடலில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் 5 பேரும், விமானியும் பலியானார்கள்.
    பியுனோஸ் அயர்ஸ்:

    மத்திய அமெரிக்க நாடு ஹோண்டுராஸ். இங்குள்ள சுற்றுலாத்தலமான ரோட்டான் தீவில் இருந்து குட்டி விமானம் ஒன்று நேற்று முன்தினம் அங்குள்ள ட்ருஜில்லோ நகருக்கு புறப்பட்டது. இதில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் பயணம் செய்தனர்.

    இந்த விமானம் புறப்பட்டுச்சென்ற சில வினாடிகளில் விமான கட்டுப்பாட்டு மையத்தின் தொடர்பை இழந்தது. அடுத்த சில வினாடிகளில் அந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் அந்த விமானத்தில் இருந்த வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் 5 பேரும், விமானியும் பலியாகி விட்டனர். தகவல் அறிந்ததும் மீட்புப்படையினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். பலியான சுற்றுலாப்பயணிகளில் 4 பேர் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் என ராணுவ செய்தி தொடர்பாளர் ஜோஸ் டொமிங்கோ தெரிவித்தார். 5-வது சுற்றுலாப்பயணி எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது இன்னும் தெரிய வரவில்லை.

    இந்த விமான விபத்துக்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது.
    ×