search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "High speed rail"

    • தஞ்சை-சென்னை இடையே அதிவிரைவு ரெயிலை இயக்க வேண்டும்.
    • திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை பூதலூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தி இயக்க வேண்டும்.

    தஞ்சாவூர்

    காவிரி டெல்டா ரெயில்வே பயணிகள் சங்க த்தின் தலைவர் அய்யனா புரம் நடராஜன், செயலாளர் வக்கீல் ஜீவக்குமார், துணைச்செ யலாளர் கண்ணன், துணை தலைவர் பேராசிரியர் திருமேனி, சோளகம்பட்டி ஊராட்சி தலைவர் மேனகா முத்துசாமி ஆகியோர் தென்னக ரெயில்வே திருச்சி கோட்ட மேலாளர் அன்பழகனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருந்த தாவது:-

    திருச்சி -தஞ்சாவூர் இடையில் உள்ள சோழகம்பட்டி ரெயில் நிலையத்தில் ரெயில்வே கேட் அமைக்க வேண்டும்.

    தஞ்சை - சென்னை இடையே ரெயில் பயண தூரத்தை குறைக்கும் வகையில் தஞ்சையை அடுத்த திட்டை கிராமத்தில் இருந்து அரியலூருக்கு சுமார் 30 கி.மீ. தூரத்திற்கு புதிய ரெயில் வழித்தடம் அமைக்க வேண்டும்.

    திருச்சி-தஞ்சை-வேளாங்கண்ணி-காரைக்கால் மார்க்கத்தில் பயணிகள் வசதிக்காக கூடுதலாக மின்சார ரெயி ல்கள் இயக்க வேண்டும்.

    காரைக்கால்-திருச்சி பயணிகள் ரெயிலை தஞ்சை யில் மாலை 5.50 மணிக்கு புறப்படும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும்.

    திருச்சி-மயிலாடுதுறை பயணிகள் ரெயிலை முன்புபோலவே திருச்சியில் காலை 7.35 மணிக்கு புறப்படும் வகையில் மாற்றியமைக்க வேண்டும்.

    திருச்சி-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலை வேளாங்கண்ணி வரை இயக்க வேண்டும்.

    தஞ்சையில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் புதிதாக அதி விரைவு ரெயில் இயக்க வேண்டும்.

    திருச்செந்தூர்- சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலை பூதலூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தி இயக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • காரைக்குடி- திருவாரூர் இடையே ரெயிலின் வேகம் அதிகப்படுத்தப்பட இருப்பதால் பயண நேரம் அரை மணி நேரம் வரை குறைய வாய்ப்பு உள்ளது.
    • விருதுநகர்-மானாமதுரை இடையே வேகத்தை 110 கிலோமீட்டராக மாற்ற வேண்டும்.

    தென்காசி:

    கடந்த ஏப்ரல் மாதம் 8-ந்தேதி தாம்பரம்-செங்கோட்டை ரெயில் சேவை பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. ஏப்ரல், மே மாதங்களில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்தும், திங்கள்கிழமைகளில் செங்கோட்டையில் இருந்தும் வாராந்திர ரெயிலாக இயங்கியது.

    பின்னர் ஜூன் மாதம் முதல் ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்தும், திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் செங்கோட்டையில் இருந்தும் வாரம் மும்முறை ரெயிலாக இந்த ரெயில் இயங்கி வருகிறது.

    தாம்பரம்-செங்கோட்டை அதிவிரைவு ரெயில் (வண்டி எண் 20683) தாம்பரத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.50 மணிக்கு செங்கோட்டை வருகிறது. மறுமார்க்கமாக செங்கோட்டை-தாம்பரம் அதிவிரைவு ரெயில் (வண்டி எண் 20684) செங்கோட்டையில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்தை மறுநாள் காலை 6.05 மணிக்கு சென்றடையும். இரு மார்க்கங்களிலும் 764 கிலோமீட்டர் தூரத்தை 13 மணி 50 நிமிடங்களில் சராசரியாக 55 கிலோ மீட்டர் வேகத்துடன் பயணிக்கிறது.

    தற்போது காரைக்குடி-திருவாரூர் இடையே அதிகபட்ச வேகம் 70 கிலோமீட்டரில் இருந்து 110 ஆக உயர்த்துவதற்கு சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ளதால் தாம்பரம்-செங்கோட்டை ரெயிலின் வேகத்தை அதிகரித்து பயண நேரத்தை குறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பயணிகளிடையே எழுந்துள்ளது.

    இதுகுறித்து ரெயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறியதாவது:-

    தற்போது காரைக்குடி- திருவாரூர் இடையே ரெயிலின் வேகம் அதிகப்படுத்தப்பட இருப்பதால் பயண நேரம் அரை மணி நேரம் வரை குறைய வாய்ப்பு உள்ளது. மேலும் விருதுநகர்-மானாமதுரை இடையே வேகத்தை 110 கிலோமீட்டராக மாற்ற வேண்டும்.

    மேலும் மின்சார ரெயில் என்ஜின் மூலம் செங்கோட்டையில் இருந்து தாம்பரம் வரை இந்த ரெயிலை இயக்கினால் மேலும் அரை மணி நேரம் குறையும். தென்காசி -நெல்லை ரெயில் வழித்தட மக்களின் நலன் கருதி செங்கோட்டையில் இருந்து 4.15 மணிக்கு பதிலாக 5.15 மணிக்கு புறப்படும் வகையில் அட்டவணையை மாற்றி அமைக்கும்போது பயண நேரத்தை 12 மணி 50 நிமிடங்களாக குறைக்க முடியும்.

    தாம்பரத்தில் இருந்து மறுமார்க்கமாக வரும்பொழுது காலை 8 மணிக்கு முன்பாக செங்கோட்டையை சென்றடையும் வகையில் அட்டவணையை மாற்றி ரெயிலின் வேகத்தை அதிகரிக்க வேண்டும். மேலும் வாரம் மும்முறை ரெயிலை பயணிகளின் நலன் கருதி தினசரி ரெயிலாக இயக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×