search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hige Rate"

    • நாளை மறுநாள் சுபமுகூர்த்த தினம் வருவதால் இன்று பூக்களின் விலை அதிகரித்து காணப்பட்டது.
    • பிச்சிப்பூ இன்று 2 மடங்கு விலை உயர்ந்து ரூ.1,100-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    நெல்லை:

    பண்டிகை நாட்கள், சுபமுகூர்த்த தினங்களை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரித்து காணப்படுவது வழக்கம்.

    சுபமுகூர்த்த தினம்

    அந்த வகையில் நாளை மறுநாள் 4-ந் தேதி சுபமுகூர்த்த தினம் வருகிறது. இதையொட்டி இன்று பூக்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. நெல்லை சந்திப்பு பூ மார்க்கெட்டில் இருந்து மாநகர பகுதிகளுக்கு மட்டுமின்றி பல்வேறு இடங்களுக்கும் வியாபாரிகள் பூக்களை வாங்கி செல்வது வழக்கம்.

    இன்று ஏராளமான வியாபாரிகள் மட்டுமின்றி, பொது மக்களும் பூக்களை வாங்க வந்தனர். ஆனால் இன்று வழக்கத்தை விட பூக்கள் விலை உயர்ந்திருந்தது.

    இரு மடங்கு விலை உயர்வு

    நேற்று கிலோ ரூ.650-க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ இன்று 2 மடங்கு உயர்ந்து ரூ.1,100-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று கிலோ ரூ.1,200-க்கு விற்கப்பட்ட மல்லிகை பூ இன்று ரூ.1,600-க்கு விற்கப்பட்டது.

    இதே போல் ஒரு கட்டுகள் கொண்ட ரோஜாப்பூ ரூ.100, கேந்தி பூ ஒரு கிலோ ரூ.35, சம்மங்கி ரூ.150, வாடாமல்லி ரூ.40, தாமரை ஒன்றுக்கு ரூ.10 என விற்பனை செய்யப்பட்டது.

    பூக்களின் விலை அதிகரித்து காணப் பட்டாலும், முகூர்த்த நாளை முன்னிட்டு வியாபாரிகளும், பொது மக்களும் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

    இதுதொடர்பாக சந்திப்பு பூ மார்க்கெட் வியாபாரிகள் கூறும்போது, வழக்கமாக பண்டிகை மற்றும் முகூர்த்த தினங்களில் பூக்களின் விலை அதிகரிப்பது வழக்கம். அந்த வகையில் 4-ந் தேதி முகூர்த்த தினத்தை முன்னிட்டு இன்று பூக்களின் விலை அதிகரித்துள்ளது. நாளை பூக்களின் விலை மேலும் அதிகரிக்கும்.

    நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. எனினும் தேவை அதிகரிப்பால் விலை ஏற்றம் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது என தெரிவித்தனர்.

    இதேபோல் ஆலங்குளம் பூ மார்க்கெட்டில் நேற்று 1 கிலோ பிச்சிப்பூ ரூ.650-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.1,250 ஆகவும், நேற்று 1 கிலோ மல்லிகை பூ ரூ.1,000-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.1,500 ஆக விற்கப்பட்டது.

    ×