search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Herbal Oil"

    • மூட்டுகளில் தேய்மானம் உண்டாகும் போது வலி உண்டாகும்.
    • மூட்டுகளில் ஜவ்வு குறைந்து நாளடைவில் வலி அதிகரிக்க செய்யும்.

    எலும்பின் நடுவில் இருக்கும் மூட்டுகளில் தேய்மானம் உண்டாகும் போது வலி உண்டாக்க கூடும். பொதுவாக வயதான பிறகு தான் தேய்மானம் உண்டாகும் ஆனால் தற்போது வயதானவர்களை காட்டிலும் இளம் வயதினரையும் மூட்டு வலி பிரச்சினை விட்டுவைக்கவில்லை. தலைவலி வந்தால் மாத்திரை போட்டுக்கொள்வது போல் மூட்டு வலிக்கு அவ்வப்போது வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துகொள்வதால் தற்காலிகமாக வலி குறையும். ஆனால் மூட்டு எலும்புகளில் ஜவ்வு குறைந்து நாளடைவில் வலி அதிகரிக்கச் செய்யும்.

    நடக்கும் போதும், உட்கார்ந்து எழும் போதும் படிகளில் ஏறும் போதும் ஒருவித சத்தம் கேட்கும். இவைதான் தொடக்க கால மூட்டுவலியின் அறிகுறிகள். இதற்கு முன்னோர்கள் மூலிகை எண்ணெய் தைலத்தை காய்ச்சி பயன்படுத்துவார்கள். தொடர்ந்து ஒரு மண்டலம் தேய்த்து வந்தால் வலி குறைந்து மூட்டுகளின் உள் இருக்கும் ஜவ்வு பகுதியும் பாதுகாப்பாக இருக்கும்.

    எல்4, எல்-5, எஸ்-1 முதுகு தண்டுவட பாதிப்பு, டிஸ்க் பஞ்ச் ஆகிவிட்டது, முதுகு தண்டுவடப்பகுதியில் வலி அதிகமாக உள்ளது, என்னால் பாத்ரூம் கூட செல்ல முடியவில்லை என்று பலரும் புலம்புவார்கள். அவர்களுக்கு இந்த விராலி இலை போட்டு காய்ச்சிய எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    வீட்டிலேயே இந்த மூலிகை எண்ணெய்யை தயாரிக்க முடியும். எப்படி தயாரிக்கலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    விராலி இலை- ஒரு கைப்பிடி

    நல்லெண்ணெய்- 250 கிராம்

    செய்முறை:

    ஒரு இரும்பு கடாயில் சுத்தமான நல்லெண்ணெய் சேர்த்து அது காய்ந்ததும் இதில் ஒரு கைப்பிடி விராலி இலைகளை கழுவி விட்டு உலர்ந்த பிறகு அந்த எண்ணெயில் போட்டு நன்றாக காய்ச்ச வேண்டும். நன்றாக இலை காய்ந்து பிரவுன் கலர் வந்த பிறகு அடுப்பில் இருந்து இறக்கி அப்படியே ஒரு நாள் முழுவதும் வைத்துவிட்டு மறுநாள் ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொண்டு தேவையான போது உபயோகப்படுத்த வேண்டும்.

    மூட்டுவலி இருக்கும் போது லேசாக சூடுபடுத்தி மூட்டுகளில் தேய்த்து வந்தால் வலி குறையும். தொடர்ந்து 10 நாட்கள் தேய்த்துவந்தாலே அதன் பலனை நன்றாக உணர முடியும்.

    ×