search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Healthy Living"

    • பெண்களின் உடல் எடை அதிகரிப்பது இயல்பான ஒன்றுதான்.
    • நல்ல தூக்கமும், உடற்பயிற்சியும் அவசியம்.

    ஆரோக்கியமாக உடல் எடையை குறைக்க ஆசைப்பட்டால், ஆரோக்கிய உணவுகளை மட்டும் சாப்பிடுங்கள். அதுவே, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிகாட்டும்

    `பிரசவத்திற்கு பிறகு பெண்களின் உடல் எடை அதிகரிப்பது இயல்பான ஒன்றுதான். சுலபமாகவே குறைத்து விடலாம். கார்போஹைட்ரேட் எனப்படும் சாதத்தை குறைத்துக்கொண்டு, நார்ச்சத்து, புரதம் அதிகமாக இருக்கும் காய்கறி, பழங்களை அதிகமாக சாப்பிடுங்கள். உணவுகளுடன், கேரட், வெள்ளரி சாலட்களை சேர்த்துக் கொள்ளுங்கள்.

    சிறுதானியங்களையும், பயிர் வகைகளையும் உணவோடு சேர்த்துக்கொண்டால், 3 மாதங்களிலேயே 10 கிலோ வரை உடல் எடையை குறைத்துவிடலாம். இதுவே ஆரோக்கியமான உணவு முறை. இதுவே பல இளம் தாய்மார்களுக்கு உடல் எடையை குறைக்க உதவும் வழிகாட்டி.

    சோறு குறைவாகவும், காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள், தானியங்கள், பயிர் வகைகள் அதிகமாகவும் இருக்கும் பட்சத்தில், உடல் எடை கட்டுக்கோப்பாக இருக்கும்.

    உடலும் ஆரோக்கியமாக இருக்கும். நல்ல தூக்கமும், உடற்பயிற்சியும் அவசியம். இது பெண்களுக்கு மட்டுமல்ல, உடல் எடையை குறைக்க ஆசைப்படும் எல்லோருக்குமே பொருந்தும். சமச்சீரான உணவு முறையில் உடல் எடையை குறைப்பதுதான், ஆரோக்கியமானது.

    சப்ளிமெண்ட் பவுடரை கலந்து குடித்தால் உடல் எடை குறையும், குறைவாக சாப்பிட்டால் உடல் எடை குறையும், பழங்களை மட்டும் சாப்பிட்டால் உடல் எடை குறையும்... என்பது போன்ற தகவல்களில் உண்மையும் இல்லை, ஆரோக்கியமும் இல்லை. ஆரோக்கியமாக உடல் எடையை குறைக்க ஆசைப்பட்டால், ஆரோக்கிய உணவுகளை மட்டும் சாப்பிடுங்கள். அதுவே, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிகாட்டும்.

    வீட்டில் சமைக்கப்படாமல் கடைகளில் வாங்கி சுவைக்கப்படும் பாக்கெட் மற்றும் பாட்டில் உணவு பொருட்களைதான் ஜங்க் புட் என்கிறோம். ஏன்..! சாக்லெட்டும் ஜங்க் உணவுதான். இதில் கெட்ட கொழுப்பு, அளவிற்கு அதிகமான சர்க்கரை மற்றும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாமோலின் ஆயில் நிறைந்திருக்கிறது.

    இவை வளர்சிதை மாற்றம் (மெட்டபாலிக் சிண்ட்ரம்), அதிக உடல் பருமன் (ஒபேசிட்டி) மற்றும் சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை. முடிந்தவரை பாக்கெட் உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதற்கு மாற்றாக, ராகி பிஸ்கட், வேர்க்கடலை உருண்டை, சோளம், பாப்கார்ன், ராகி அரிசி புட்டு போன்றவற்றை வீட்டிலேயே சமைத்து சாப்பிடலாம்.

    குழந்தைகள் பழம், காய்கறிகளை உண்ண மறுத்தால், அதை வேறுவிதமாக சமைத்து கொடுக்கலாம். பழங்களை சாப்பிடாத குழந்தைக்கு புரூட் சாலட் கொடுக்கலாம். காய்கறிகளை சூப் ஆக சமைத்துக் கொடுக்கலாம். இல்லை என்றால், ஜூஸ் ஆக மாற்றி பருக கொடுக்கலாம். இப்போது காய்கறிகளை கொண்டு சட்னி வகைகளும் தயாரிக்கப்படுகின்றன. குழந்தைகளுக்கு வண்ணமயமான உணவு பிடிக்கும் என்பதால், பலதரப்பட்ட வண்ணங்களில் உணவு சமைக்கலாம்.

    எல்லா வயது பெண்களும் தங்கள் உணவோடு, நிச்சயம் கால்சியம் (பால், தயிர், மோர்), புரோட்டீன் (முட்டை, சிக்கன், சீஸ், மீன், உடைந்த கடலை, பீன்ஸ், பருப்பு வகைகள்) சேர்த்துக்கொள்ள வேண்டும். 40 வயதை தாண்டிய பெண்கள், தினமும் 2 பேரீச்சை பழங்களை சாப்பிட வேண்டும்.

    முடிந்தவரை, ஆரோக்கியமானதை சாப்பிட வேண்டும். தங்களுக்கு என நேரம் ஒதுக்கி, தங்களை உடல் அளவிலும் மனதளவிலும் பக்குவப்படுத்திக் கொள்வது அவசியம். கட்டாயம், ஏதாவது ஒரு உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

    மனிதனின் வாழ்க்கை காலம், 100 வயதில் இருந்து 80 வயதாக குறைந்தது. பின்பு, 60 வயதாக சுருங்கியது. இப்போது 40 வயதிலேயே, மாரடைப்பு போன்ற பிரச்சினைகளால் வாழ்நாள் குறைந்து கொண்டிருக்கிறது. இந்த மாற்றத்திற்கு, உணவுகள்தான் முக்கிய காரணம்.

    நாம் உண்ணும் உணவுகளும், நம்முடைய உணவு பழக்கவழக்கமும் தான் நம்முடைய வாழ்க்கையை தீர்மானிக்கிறது என்பதால், உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

    முடிந்தவரை, நன்றாக சாப்பிடுங்கள். நல்லதையே சாப்பிடுங்கள். ஜங்க் உணவுகளை தவிர்த்து சமச்சீரான உணவு பழக்கத்திற்கு மாறுங்கள்.

    • உபசரிப்பு என்பது உதட்டளவில் இல்லாமல் மனதளவில் நிறைந்திருக்க வேண்டும்.
    • ஆறு சுவைகளுமே மனிதனுக்கு அன்றாடம் தேவைப்படுகின்ற சுவைகளாகும்.

    தமிழர்களின் பண்பாடுகள் எல்லாம் தலைசிறந்த விருந்தோம்பல் என்பதும் ஒன்று. உபசரிப்பு என்பது உதட்டளவில் இல்லாமல் மனதளவில் நிறைந்திருக்க வேண்டும். விருந்தளிக்கும் பொழுது சிறப்பாக எல்லா சுவைகளும் கலந்த விதத்தில் தலை வாழை இலைபோட்டு புன்னகையோடு விருந்தளித்தால் அறுசுவை உணவோடு அற்புதமான சாப்பாடு என்று சொல்வார்கள்.

    அந்த ஆறு சுவைகளுமே மனிதனுக்கு அன்றாடம் தேவைப்படுகின்ற சுவைகளாகும். இந்த ஆறு சுவைகளையும் யார் ஒருவர் உட்கொண்டு வந்தாலும் உடலில் நோய்க்கான அறிகுறிகளே இருக்க முடியாது. ஆறுசுவையும் ஒரே காலத்தில் ஒரு சேரக்கிடைப்பது என்பது அரிது. எனவே அதற்கான காலங்கள் வரும் பொழுது அவற்றை நாம் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியமாகும்.

    ஒவ்வொரு மனிதனும் உடல் நலத்தை பேணுவதற்கு அத்தியாவசியத்தேவை நல்ல சத்துள்ள உணவாகும். இனிப்பு, உப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, துவர்ப்பு என்னும் அறுசுவைகளும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவை. இவற்றை தேவைக்கேற்ப சாப்பிட்டால் தேகநலன் சீராகும்.

    வருடத்தின் முதல் நாள், மாதத்தின் முதல் நாட்களில் முக்கியமாக சதுர்த்தி, பொங்கல் விழா எனப்படும் முக்கிய நாட்களில் பிள்ளையாருக்கு சர்க்கரைப் பொங்கல் வைப்பது வழக்கம். அதில் வெல்லத்தை சேர்த்து இனிப்பு சுவையை கூட்டிக் கொள்கின்றோம். அதேபோல மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு அன்று நமது இல்லத்தில் ஐஸ்வர்யம் பெருகுவதற்காக உப்பு வாங்குவது வழக்கம். அதை நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தி வருகின்றோம்.

    நமது உடம்பில் உள்ள எலும்பு, நரம்புகளுக்கு கால்சியம் சத்து தேவை. அதை சோடியம் குளோரைடு என்னும் உப்பின் மூலமாகப் பெறுகின்றோம்.

    வருடப்பிறப்பு அன்று எல்லா சுவைகளும் கலந்த உணவை நம் முன்னோர்கள் வைப்பது வழக்கம். இனிப்பு, உப்பு, கசப்பு. கார்ப்பு. துவர்ப்பு, புளிப்பு ஆகிய ஆறுசுவைக்கும் ஏற்ப சாம்பார். கூட்டு. பொரியல். அப்பளம், பாயசம், வேப்பம்பூ பச்சடி, மாங்காய் இனிப்பு பச்சடி, வாழைப்பூ வடை என்றெல்லாம் வைத்து உணவு பரிமாறிய பிறகு வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு வைத்து விருந்தினரை கவனிப்பது வழக்கம். பாக்கில் துவர்ப்பு சத்தும் வெற்றிலை ஜீரண சக்தியையும், சுண்ணாம்பு கால்சியம் சத்தையும் கொடுக்கின்றது.

    பொதுவாக வாழ்க்கை என்பது இன்பமும். துன்பமும், நன்மையும். தீமையும் கலந்து வருவதுதான். எந்த விழாவிற்கு சென்றாலும் முதலில் இனிப்புத் தான் கொடுப்பர். பிறந்தநாள் என்றாலும் திருமண நாள் என்றாலும், திருமணத்தில் தாலிகட்டும் நேரத்திலும் இனிப்பு வழங்குவதுதான் வழக்கம். இவ்வாறு விழா நாட்களில் இனிப்பை உட்கொண்டாலும் மற்ற நாட்களில் பிறகவைகளும் நமக்குத் தேவை. எப்படித்தான் இனிப்பு சுவை இருந்தாலும் கசப்பு சுவையும் நம் உடலுக்கு அவசியம் தேவை.

    இன்பத்தை பார்க்கும் நாம் துன்பத் தையும் சமமாகப் பார்க்க வேண்டும். உதாரணமாக கரும்பு இனிப்பின் இருப்பிடம். வேம்பு கசப்பின் இருப்பிட மாகும். இதனால் தான் வருடப் பிறப்பன்று கசப்பாக இருந்தாலும் வேப்பம்பூ பச்சடியை சேர்க்கின்றோம்.

    தை மாதம் இனிப்புச்சுவை தரும் கரும்பினையும் உண்கின்றோம். ஆடி மாதத்தில் அம்பிக்கையைக் கொண்டாட வேப்பிலை எடுத்துச்செல்வர். கூழ் காய்ச்சிக் கொடுப்பதில் வேப்பிலை தூவுவர். வேம்பு என்பது ஒரு கிருமி நாசினி. சர்வரோக நிவாரணி என்று கூடச் சொல்ல லாம். இதைத்தவிர நீரழிவு, புற்றுநோய் தடுப்பு. அம்மை நோய் தடுப்பு, மற்றும் நம் உடலில் உருவாகும் நச்சுக் களை அழிப்பதற்கும் பயன்படுகின்றது.

    வீடுகளில் விருட்சங்களாக வைத்துக் கொள்ளக்கூடிய ஒரு தெய்வீக மூலிகை வேம்பாகும். கரும்பிற்கும், வேம்பிற்கும் உள்ள சுவை முற்றிலும் வேறுபட்டதாக இருந்தாலும் சுகத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில் இரண்டும் சமநிலை வகிக்கின்றது.

    உடம்பை வளர்த்தேன். உயிர் வளர்த்தேனே' என்று திருமூலர் கூறியுள்ளார். எனவே ஆரோக்கியத்தில் அக்கரை செலுத்தினால் தான் சீரோடும். சிறப்போடும் ஒவ்வொருவரும் வாழமுடியும். எனவே அன்றாட வாழ்வில் அறுசுவை உணவால் ஆரோக்கிய வாழ்வை நாம் பெறவாம்.

    ×