என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "He who drank poison died"

    • சம்பவத்தன்று சந்திரசேகர் விஷ மருந்து குடித்துள்ளார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே சின்ன கொடிவேரி பகுதி குருசாமி நாயக்கர் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 43). இவரது மனைவி சாந்தி (37).

    சந்திரசேகர் சில நாட்க ளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு வந்தார். இதனால் மன வேதனை அடைந்த சந்திரசேகர் தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வருவார் என கூறப்படுகிறது.

    இந்நிலையில் சம்பவத்தன்று சந்திரசேகர் விஷ மருந்து குடித்துள்ளார். இதையடுத்து உறவி னர்கள் அவரை மீட்டு சத்தி யமங்கலம் தனியார் மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த சந்திரசேகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    பின்னர் இது குறித்து அவரது மனைவி சாந்தி பங்களாபுதூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    ×