என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "He was depressed"

    • திருமணமாகாத விரக்தியில் பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (வயது 32). இவர் அதே பகுதியில் சவுண்ட் சர்வீஸ் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

    இவருக்கு 32 வயது ஆகியும் திருமணம் நடைபெறாமல் இருந்து வந்துள்ளது. இதனால் மனஉளைச்சளுக்கு ஆளானார். இந்த நிலையில் நேற்று வீட்டின் அறையில் சேலையால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் கிடந்தார்.

    நீண்ட நேரமாகியும் சீனிவாசன் அறையில் இருந்து வெளியே வராததால் இவரது தாயார் கதவை திறந்து பார்த்தார். அப்போது சீனிவாசன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இது குறித்து பள்ளிகொண்டா போலீசாருக்கு தகவல் ெதரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் சீனிவாசன் உடலை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமண மாகாத விரக்தியில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • திருமணமான ஒரே வாரத்தில் சோகம்
    • போலீசார் விசாரணை

    கீழ்பென்னாத்தூர் :

    கீழ்பென்னாத்தூர் அடுத்த செவரபூண்டி பகுதியைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகள் சந்தியா (வயது 20).

    இவருக்கும் விழுப்புரம் மாவட்டம் அவலூர் பேட்டை பகுதியை சேர்ந்த முருகன் (35) என்பவருக்கும் கடந்த 9-ந் தேதி திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து தம்பதியினர் சந்தியாவின் வீடான தாயார் வீட்டுக்கு வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் சந்தியா வீட்டின் அருகே குளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென சந்தியா மயங்கி கீழே விழுந்து கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சந்தியா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து சந்தியாவின் தந்தை கீழ்பென்னாத்தூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி இறந்த துக்கம் தாங்காமல் முருகன் மன உளைச்சலுக்கு ஆளானார். இந்த நிலையில் முருகன் உறவினர்களிடம் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் விழுப்புரம் மாவட்டம் குண்டலம் பட்டி பகுதியில் உள்ள அவரது வீட்டு அருகே உள்ள விவசாய நிலத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    திருமணம் ஆகி 6 நாட்களே ஆன நிலையில் மனைவி இறந்த நிலையில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் இடையே சோகத்தை ஆழ்த்தியுள்ளது.

    ×