search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "have problem"

    • இவர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கு வதில் சிக்கல் எழுந்துள்ளது
    • வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணை க்க வேண்டியதும் அவசியமாகும்.

    ஈரோடு, 

    பிரதமரின் கிசான் சம்மான் நிதி (பி.எம்.கிசான்) திட்டத்தின் கீழ் நிலம் உள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2,000 வீதம் ஆண்டிற்கு ரூ.6,000 வேளாண் இடுபொருட்கள் வாங்கும் வகையில் ஊக்கத்தொகை மத்திய அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

    திட்டம் தொடங்கப்பட்ட காலகட்டத்தில் விண்ண ப்பித்த பெரும்பா லான விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. அதன்பின்னா் திட்டத்தை ஒழுங்கு படுத்தும் வகையில்,

    ஆதார் மூலம் விப ரங்களை புதுபிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆதார் மூலம் புதுப்பித்தால் மட்டுமே பி.எம்.கிசான் திட்டத்தில் அடுத்த (14 வது) தவணைத்தொகை பெற முடியும் என மத்திய அரசு தெளிவாக விளக்கி உள்ளது.

    மேலும் பிரதமரின் கிசான் நிதி உதவி பெற்று வரும் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியதும் அவசியமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் தற்போது 10,300 விவசாயிகள் தங்களது ஆதார் எண்ணை சரிபார்த்து உறுதி செய்யாமலும், 8000 விவசாயிகள் வங்கி கணக்கு டன் ஆதார் எண்ணை இணைக்காமலும் உள்ள தாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே இவர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கு வதில் சிக்கல் எழுந்துள்ளது.

    இது குறித்து வேளா ண்மை இணை இயக்குநர் வெங்கடேசன் கூறியதாவது:- பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் நிலம் உள்ள விவசாயிகளுக்கு ஆண்டிற்கு ரூ.6,000 வேளாண் இடுபொருட்கள் வாங்கும் வகையில் ஊக்கத்தொகை ஒன்றிய அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டுமெனில் ஆதார் மூலம் விபரங்களை புதுபிக்க வேண்டும். மேலும் பிரதமரின் கிசான் நிதி உதவி பெற்று வரும் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியதும் அவசியமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இப்பணிகளை செய்தால் மட்டுமே அடுத்த தவணை ஊக்கத்தொகை வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்தில் 18 ஆயிரம் பேர் ஆதார் விபரங்களை இணைக்காமல் உள்ளனர். எனவே இதுவரை பதிவை புதுப்பிக்காத விவசாயிகள் உடனடியாக தங்களது ஆதார் எண்ணை சரிபார்த்து உறுதிப்படுத்த வேண்டும்.

    ஆதார் எண்ணுடன் செல்பேசி எண்ணை ஏற்கனவே இணைத்துள்ள விவசாயிகள் www.pmkisan.gov.in என்ற பி.எம்.கிசான் வலைதளத்தில் தங்களின் ஆதார் எண் விவரத்தினை உள்ளீடு செய்தால், ஓடிபி எண், தங்களது செல்பேசிக்கு அனுப்பப்படும். அந்த ஓடிபி எண்ணை உள்ளீடு செய்து ஆதார் விவரங்களை சரிபார்த்து உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.

    இதுநாள் வரை ஆதார் எண்ணுடன் செல்பேசி எண்ணை இணைக்காத விவசாயிகள், அருகில் உள்ள பொது சேவை மையங்களுக்கு சென்று பிரதமரின் கிசான் திட்ட வலைதளத்தில் தங்களது ஆதார் எண் விவரங்களை உள்ளீடு செய்து, தங்களின் விரல் ரேகையினை பதிவு செய்து விவரங்களை சரிபார்த்து உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.

    இதுவரை பிரதமரின் கிசான் பதிவை புதுப்பிக்கா தவர்கள தங்கள் பகுதி அஞ்சல் அலுவலகம் மூல மும் ஆதார் எண்ணுடன் மொபைல் போன் எண்ணை இணைத்து விவரங்களை புதுப்பித்து கொள்ளலாம். மேலும் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தினை அணுகி விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×