search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Have a feast"

    • ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100 முதல் 200-க்கும் மேற்பட்ட கிடாய்களை பக்தர்கள் கோவிலில் நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர்.
    • கிடாய் விருந்தில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து சுமார் 5,000-க்கும் கலந்து கொண்டு உணவருந்தினர்.

    திருச்சுழி:

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள தமிழ்பாடி கிராமத்தில் மந்தகுமாரன் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் களரி திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும் இந்தத் திருவிழாவில் அதிகாலை முதல் மாலை வரை இடைவெளியின்றி தொடர்ச்சியாக நடைபெறும் சமபந்தி கிடாய் கறி விருந்து நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றது.

    கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த திருவிழாவின் சமபந்தி கிடாய் விருந்தில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வது தனிச்சிறப்பாகும். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100 முதல் 200-க்கும் மேற்பட்ட கிடாய்களை பக்தர்கள் கோவிலில் நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர்.

    இந்த ஆண்டு நடைபெற்ற திருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக கொண்டு வந்திருந்த 196 ஆடுகள் கோவில் சன்னதி முன்பாக பலியிடப்பட்டது. இதனையடுத்து பலியிடப்பட்ட ஆடுகளை சமைத்து அனைவருக்கும் சமபந்தி கறி விருந்தாக பரிமாறப்பட்டது. இந்த கிடாய் விருந்தில் பெண்கள் பங்கேற்க கூடாது என்பதால், ஆண்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

    இதில் பங்கேற்பதற்காக தமிழ்ப்பாடி, திருச்சுழி, அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு மேல் நீண்ட வரிசையில் காத்திருந்து சமபந்தி கிடாய் விருந் தில் பங்கேற்று பசியாறினர்.

    முன்னதாக மந்தகுமாரன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. அதன் பின்னர் காலை 9 மணி அளவில் சமபந்தி கிடாய் விருந்து தொடங்கியது. கிடாய் விருந்தில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து சுமார் 5,000-க்கும் கலந்து கொண்டு உணவருந்தினர்.

    மேலும் இந்த சமபந்தி விருந்தில் கலந்துகொள்ளும் ஆண்கள் மது அருந்தி பங்கேற்கக் கூடாது எனவும், அவ்வாறு மது அருந்தி விருந்தில் கலந்துகொண்டால் சுவாமியின் கடுமையான தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்பது காலங்காலமாக தமிழ்பாடி கிராம மக்களின் இன்றளவும் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    ×