என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Harvest work"

    • விளைச்சல் குறைவு உள்ளிட்ட பிரச்சினைகளை விவசாயிகள் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர்.
    • விதைப்பின் போது இருக்கும் விலை, அறுவடையின் போது பல மடங்கு குறைந்து விடுகிறது.

     உடுமலை:

    உடுமலை அருகே ஜல்லிபட்டி, மானுப்பட்டி உள்ளிட்ட மேற்குத்தொடர்ச்சி மலை அடிவார கிராமங்களில் பருவமழையை அடிப்படையாக கொண்டு மானாவாரி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.குறிப்பாக வடகிழக்கு பருவமழை சீசனில் மொச்சை பல ஆயிரம் ஏக்கரில் விதைப்பு செய்யப்படுகிறது. மேலும் வனப்பகுதியிலுள்ள ஈசல் திட்டு உள்ளிட்ட மலைவாழ் கிராமங்களில் இச்சாகுபடி பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது.

    பொங்கல் சீசனை இலக்காக வைத்து இச்சாகுபடியை பாரம்பரியமாக மேற்கொண்டு வருகின்றனர். இப்பகுதியில் விளையும் மொச்சைக்கு சந்தைகளில் தனி கிராக்கி உள்ளது.ஆனால் அறுவடைக்கு தயாராகும் சாகுபடியில் காட்டுப்பன்றிகளால் சேதம், விளைச்சல் குறைவு உள்ளிட்ட பிரச்சினைகளை விவசாயிகள் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். மேலும் விதைப்பின் போது இருக்கும் விலை, அறுவடையின் போது பல மடங்கு குறைந்து விடுகிறது. இருப்பு வைத்து விற்பனை செய்யவும் போதிய வசதிகள் இல்லாததால் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

    இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

    மொச்சை சாகுபடிக்கு உழவு, மருந்து, களை எடுத்தல் என ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக செலவாகிறது. சீதோஷ்ண நிலை ஒத்துப்போனால் ஏக்கருக்கு 600 கிலோ வரை விளைச்சல் இருக்கும். அறுவடையின் போது விலை சரிவை தடுக்க ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் வாயிலாக மொச்சையை நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்றனர்.  

    • முல்லைபெரியாறு அணையில் நீர்மட்டம் குறைந்து வருவதால் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.
    • கூ:டுதல் தண்ணீர் திறக்கவில்லையெனில் 2-ம் போக அறுவடை பாதிக்கும் என்றும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் இருபோக நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சின்னமனூர், கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் 2-ம் போக அறுவடை பணிகள் முடிவடைந்துவிட்டன. கூடலூர், தாமரைக்குளம், டி.டி.ஆர்.வட்டம், வெட்டுக்காடு உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் அறுவடை பணிகள் தொடங்கவில்லை. இந்நிலையில் முல்லைபெரியாறு அணையில் நீர்மட்டம் குறைந்து வருவதால் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.

    பாசனத்திற்கும், தேனி மாவட்டம் குடிநீர் தேவைக்கும் மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கூடலூர் பகுதி விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர். தற்போது இப்பகுதி வயல்களில் கருதள்ளக்கூடிய நிலையில் உள்ளது. இன்னும் சில நாட்கள் தண்ணீர் திறந்தால் மட்டுமே நெற்கதிர் அறுவடைக்கு தயார் நிலைக்கு வரும்.

    எனவே கூடலூர் பகுதி விவசாயிகளின் நலன் கருதி கூடுதல் தண்ணீர் திறக்கவேண்டும் என இப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். இல்லையெனில் 2-ம் போக அறுவடை பாதிக்கும் என்றும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    முல்லைபெரியாறு அணையில் தற்போது 118.85 அடி தண்ணீர் உள்ளது. வரத்து 30 கனஅடி, திறப்பு 300 கனஅடி, இருப்பு 2421 மி.கனஅடி. வைகை அணை நீர்மட்டம் 54.92 அடி, வரத்து 222 கனஅடி, திறப்பு 72 கனஅடி, இருப்பு 2706 மி.கனஅடி.

    கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் கோடை மழை கைகொடுத்தால் மட்டுமே அணைகளின் நீர்மட்டம் உயரும் என்றும், ஜூன்மாதம் முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு ஏற்படும் என்றும் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    ×