search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "happiness of people"

    • பண்ருட்டி அருகே வேகாக்கொல்லையில் ஆக்கிரமிப்பு அகற்றம் செய்யப்பட்டது.
    • வேகாக்கொல்லை சுற்றுவட்டார பகுதி மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம் வேகாக்கொல்லை வருவாய் கிராமத்தில் 10 ஏக்கர் பரப்பளவி ல்பாஞ்சாலங்குட்டை உள்ளது. இந்த குட்டையி ல்மழைக்காலங்களில் தண்ணீர்சேமிக்கப்பட்டு பாசன வாய்க்கால்கள் மூலம் இந்த பகுதியில்உள்ள விவசாயநிலங்கள் பாசனம் பெற்று வந்தது. தற்போது இங்கு பெரு மளவில்ஆ க்கிரமிப்புகள் செய்யப்பட்டு இந்த குட்டையில் முந்திரி, கம்பு பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. இந்த குட்டையில் இருந்த ஆக்கிரமிப்புகளை சென்னை உயர்நீதிமன்ற உத்தரப்படிவருவாய்த்துறை அதிகாரிகள் காவல்துறை ஒத்துழைப்புடன் பொக்லின் எந்திரம் மூலம் அதிரடியாக அகற்றினர் இன்று 2-வது நாளாக ஆக்கிரமிப்பு அகற்று ம்பணி நடைபெற்று வருகிறது.

    தாசில்தார் சிவா.கார்த்தி கேயன், இன்ஸ்பெ க்டர் ராஜதாமரை பாண்டியன், துணை தாசில்தார் செந்தமிழ்செல்வி, வருவாய் ஆய்வாளர் பிரியா லதா, கிராம நிர்வாக அலுவலர் கிராம ராதிகா, நில அளவையர்கள் குணசேகரன், அரிகரன், பஞ்சாயத்து தலைவர்கள் சங்கரி ரவிச்சந்திரன், அஞ்சலை வீரபாண்டியன்ஆகியோர் அந்தப் பகுதியில் முகாமிட்டு ஆக்கிரமிப்பை அதிரடியாக அகற்றி வருகின்றனர் இதனால் வேகாக்கொல்லைசுற்றுவட்டார பகுதி மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ×