search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hackathon competition"

    • பெங்களூரு ஏ.சி.எஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் தேசிய அளவிலான ஸ்மார்ட் இண்டியா ஹேக்க த்தான் போட்டி நடை பெற்றது.
    • இறுதி போட்டியில் நாடார் சரஸ்வதி கல்லூரி மாணவர்கள் தேசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர்.

    தேனி:

    பெங்களூரு ஏ.சி.எஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் தேசிய அளவிலான ஸ்மார்ட் இண்டியா ஹேக்க த்தான் போட்டி நடை பெற்றது. தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழி ல்நுட்ப கவுன்சில் துணை த்தலைவர் மயில்சாமி அண்ணாத்துரை தலைமை தாங்கினார். இதில் 40-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் கலந்து கொண்டன.

    தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி உள்பட 4 கல்லூரிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. இறுதி போட்டியில் நாடார் சரஸ்வதி கல்லூரி மாணவர்கள் சரவணன், ஹரிபிரசாத், ரேவந்த், சாருமதி, பிரியங்கா, கவிதா ஆகியோர் தேசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர்.

    அவர்களுக்கு விஞ்ஞானி குணசேகரன் ரூ.1 லட்சம் வழங்கினார். கணினி மற்றும் அறிவியல் துறை தலைவர் மதளைராஜ், தகவல் மற்றும் தொழி ல்நுட்பத்துறை தலைவர் விக்னேஷ், பேராசிரியர் சோலைராஜ், பேராசிரியை ெபரின்ஜெபா சிங்கிள் ஆகியோர் மாணவ-மாணவிகளுக்கு வழிகாட்டி னர்.

    மாணவ-மாணவிகளை தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜ்மோகன், துணைத்தலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன், ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், கல்லூ ரியின் செயலாளர்கள் ராஜ்குமார், மகேஸ்வரன், இணைச்செயலாளர் நவீன்ராம், கல்லூரி முதல்வர் மதளைசுந்தரம், துணை முதல்வர் மாதவன், வேலை வாய்ப்புத்துறை அலுவலர் கார்த்திகேயன் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டி பரிசுகள் வழங்கினர்.

    • பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டி நடந்தது.
    • சிறப்பு விருந்தினராக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் கருணாமூர்த்தி கலந்து கொண்டு பேசினார்.

    சிவகாசி

    மத்திய அரசின் உயர்கல்வித் துறை அமைச்சகம் மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு இணைந்து ''ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்-2022'' என்ற தேசிய அளவில் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான மென்பொருள் தொழில்நுட்ப போட்டி சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் 2 நாட்கள் நடந்தது.

    காணொலி காட்சி மூலம் நடந்த தொடக்கவிழாவில் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான்,ஏ.ஐ.சி.டி.இ.சேர்மன் பேராசிரியர் அனில் சகஸ்ரபுதே, மத்திய கல்வி அமைச்சரக செயலாளர் சஞ்சய்மூர்த்தி, ஏ.ஐ.சி.டி.இ. துணைத்தலைவர் பேராசிரியர் பூனியா, பெர்சிஸ்டன்ட் சிஸ்டம் நிறுவனர் ஆனந்த் தேஷ் பாண்டே, மத்திய கல்வி அமைச்சரக செயலாளர் மோனிகா ஆகியோர் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தனர்.

    சிவகாசி பி.எஸ்.ஆர்.கல்லூரி உள்பட நாடு முழுவதும் 75 அங்கீகரிக்கப்பட்ட மையங்களில் இந்த இறுதி சுற்று திறன்களை அறியும் இறுதி போட்டி நடைபெறுகிறது. பி.எஸ்.ஆர்.கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி தலைமை தாங்கினார். ஆர்த்தி ஸ்கேன்ஸ் இயக்குநர் அருண்குமார், கல்லூரியின் இயக்குனர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தனர்.

    முதல்வர் விஷ்ணுராம் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் கருணாமூர்த்தி கலந்து கொண்டு பேசினார். இதில் மத்திய கல்வி அமைச்சரகத்தை சேர்ந்த, ஏ.ஐ.சி.டி.இ.-ஆல் அங்கீகரிக்கப்பட்ட மைய தலைவர் உத்யன் மவுரியா, ஐ.சி.டி.அகாடமியின் தமிழ்நாடு கிளை தலைவர் பூர்ணபிரகாஷ், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுவின் பிரதிநிதி சோம சுந்தரம், புராடக்ட் டிசைனர் தாமரைக்கண்ணன், ஹேக்கத்தான் அலுமினி, டீன் மாரிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இறுதி சுற்றில் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 250 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் பாலசுப்பிரமணியன், மாதவன் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×