search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "grocery store and steal it"

    • கடையில் வைக்கப்பட்டு இருந்த பண பெட்டி திறந்து இருந்தது.
    • நம்பியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் பேரூராட்சி அலு வலகம் எதிரே பல்வேறு மளிகை கடை உள்பட பல்வேறு கடைகள் செயல் பட்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நம்பியூர் பேரூராட்சி அலுவலகம் எதிரே உள்ள ஒரு மளிகை கடையை அதன் உரிமையாளர் வழக்கம் போல் பூட்டி விட்டு சென்று விட்டார்.

    இதை தொடர்ந்து நேற்று காலை வழக்கம் போல் கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது கடையின் மேற்பகுதியில் மேல் உள்ள ஓடு நகர்ந்து இருப்பது தெரிய வந்தது.

    இதை கண்டு கடை உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் கடையில் வைக்கப்பட்டு இருந்த பண பெட்டியும் திறந்து இருந்தது.

    இது குறித்து கடை உரிமையாளர் நம்பியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசா ரணை நடத்தினர்.

    இதில் கொள்ளையர்கள் கடையின் ஓட்டை பிரித்து பணத்தை எடுக்க முயற்சி செய்திருக்க்றார்கள். அங்கு பணம் இல்லாத காரணத்தினால் கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் அவற்றை அப்படியே விட்டு விட்டு சென்றது தெரிய வந்தது.

    மேலும் கடையில் பொரு ட்கள் அப்படியே இருந்தது. அங்கு எதுவும் எடுத்து செல்லாதது தெரிய வந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வர்கள் யார் என தெரிய வில்லை.

    மேலும் சம்பவ இடத்துக்கு கை ரேகை நிபு ணர்கள் மற்றும் கைரேகை பிரிவு போலீசார் வந்து சோதனை செய்து தடய ங்களை சேகரித்தனர்.

    இதுகுறித்து நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த கொள்ளை முயற்சி சம்பவத்தில் ஈடு பட்டவர்கள் குறித்து தீவிர மாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×