search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Graduate youth arrested for"

    • வாகனங்களில் இருந்து பேட்டரி மற்றும் உதிரிபாகங்கள் திருடி வந்தது தெரியவந்தது.
    • பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து சூர்யாவை கைது செய்தனர்.

    பவானி:

    பவானி பழனிபுரம் மற்றும் காடையாம்பட்டி, தாளபையனூர், தொட்டி பாளையம், ஜம்பை, சன்னி யாசிபட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் டெம்போ, டிராக்டர், பள்ளி வாகனம் மற்றும் லாரிகளில் உள்ள பேட்டரி மற்றும் பொருட்கள் திருடப்பட்டதாக போலீ சாருக்கு புகார் வந்தது. அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    இந்நிலையில் சம்பவ த்தன்று பவானி பழைய பஸ் நிலையம் பகுதியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, கோபால், கிரைம் போலீஸ் ஸ்ரீரங்கன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை போலீசார் நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அப்போது காரை ஓட்டி வந்தவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து உள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் அவர் சேலம் மாவட்டம் சங்ககிரி மஞ்சள் பட்டி பொன்னம்பட்டியான் காடு பகுதியை சேர்ந்த சூர்யா (27) என்பதும் என்ஜி னீயரிங் படித்து விட்டு சிலிண்டர் கடையில் பணி யாற்றி வந்தது தெரிய வந்தது.

    மேலும் அவர் பவானி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நிறுத்தி வைக்க ப்பட்ட வாகனங்களில் இருந்து பேட்டரி மற்றும் உதிரி பாகங்கள் திருடி வந்தது விசாரணையில் தெரியவந்தது.

    இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து சூர்யாவை கைது செய்தனர். மேலும் அவரி டம் இருந்து 62 ஆயிரத்து 200 ரூபாய் மதிப்புள்ள 11 பேட்டரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

    இதை தொடர்ந்து போலீ சார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×