search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government Language Act"

    • தமிழில் பெயர் பலகை வைக்க அறிவுறுத்தப்பட்டும்.
    • நகரில் முக்கிய வீதியின் வழியாக பேரணியாக சென்றனர்.

    திருப்பூர் :

    தமிழ் ஆட்சி மொழி சட்டம் இயற்றப்பட்ட நாளை நினைவு கூறும் வகையில் ஆட்சி மொழி சட்ட வார விழா கொண்டாடப்படுகிறது. தமிழில் பெயர் பலகை வைக்க அறிவுறுத்தப்பட்டும். அதே போல் கோப்புகள் பராமரிப்பிலும் முழுமையாக தமிழ் மொழியில் பராமரித்திட அறிவுறுத்தப்பட்டு வருகிறது .அந்த வகையில் திருப்பூர் நஞ்சப்பா ஆண்கள் மேல்.நிலைப்பள்ளியில் துவங்கிய.பேரணியை கலெக்டர் வினீத் கொடி அசைத்து.துவக்கி வைத்தார்.

    பேரணியில் கலந்து கொண்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு அலுவலர்கள், தமிழ் அமைப்புகள் உள்ளிட்டோர் தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்த பதாகைகள் ஏந்தி பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வகையில் நகரில் முக்கிய வீதியின் வழியாக பேரணியாக சென்றனர்.

    ×