search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Good governance week"

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க கடந்த 19-ந்தேதி முதல் வருகிற 25-ந்தேதி வரை நல்லாட்சி வாரமாக கடைபிடிக்கப்படுகிறது.
    • பொதுமக்களின் குறைகள், அடிப்படை தேவைகளை நிறைவேற்றிடும் வகையில் சேர்மன் காவேரி சீனித்துரை தலைமையில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

    தென்காசி:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க கடந்த 19-ந்தேதி முதல் வருகிற 25-ந்தேதி வரை நல்லாட்சி வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த பொதுமக்களின் குறைகள், அடிப்படை தேவைகளை நிறைவேற்றிடும் வகையில் சேர்மன் காவேரி சீனித்துரை தலைமையில் வருகிற

    23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

    அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கீழப்பாவூர் யூனியனுக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் தங்களுக்கு தேவைப்படும் சாலை வசதி, குடிநீர் வசதி, மருத்துவ வசதிகள் மற்றும் இதர அடிப்படை வசதிகள் சம்பந்தமான கோரிக்கை மனுக்களை வழங்கலாம் எனவும், பெறப்படுகின்ற கோரிக்கை மனுக்கள் அனைத்தும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அதன் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×