search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gold South"

    • விஜயகரிசல்குளம் ஆய்வில் 5 ஆயிரம் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.
    • வைப்பாற்றங்கரையில் சிறந்த நாகரீகம் இருந்திருக்க வாய்ப்பு இருக்கலாம் என அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் மாவட்ட நிர்வாகம், தொல்லியல் துறை, சுற்றுலாத்துறை, பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் மற்றும் ராஜ பாளையம், ராஜீக்கள் கல்லூரி (முதுகலை மற்றும் வராலாற்று ஆய்வு மையம்) இணைந்து "வைப்பாற்றங் கரையின் வரலாற்றுத் தடம்" என்ற தலைப்பில் நடைபெற்ற, மாநில அளவி லான தொல்லியல் மற்றும் வரலாற்றுக் கருத்தரங்கம் மற்றும் தொல்லியல் கண்காட்சியை நடத்தினர்.

    கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். தனுஷ்குமார் எம்.பி. தங்கபாண்டியன் எம்.எல்.ஏ., சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், ராஜ பாளையம் நகர் மன்றத்தலைவர் பவித்ரா ஷியாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்காட்சியை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்து பார்வை யிட்டார்.பின்னர் அவர் கூறியதாவது:-

    நம்முடைய வரலாறு என்பது காவிரிக்கரையில் இருந்து எழுதிட வேண்டும் என்பதன் உண்மையான கோட்பாட்டின் அடிப்படை யில்தான், தமிழ்நாட்டின் தொல்லியல் ஆய்வுகளில் மிகபெரிய முன்னெடுப்பு கள் முதல்-அமைச்சர் தலைமையில் எடுத்து வருகிறோம்.

    தாமிரபரணி ஆற்றங் கரையில் கொற்கை, ஆதிச்ச நல்லூர், சிவகளை என்று பல இடங்களில் ஆய்வுகளை நடத்தி, நம் வரலாற்று னுடைய காலம் எங்கிருந்து தொடங்குகிறது என்பதை ஆய்வுகளின் முடிவில் தீர்மானித்தோம். அந்த வரிசையில், நம்முடைய விருதுநகர் மாவட்டத்திலே வைப்பாற்றங்கரையிலே ஒரு சிறந்த நாகரீகம் இருந்திருக்கக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது என்பதன் அடிப்படையில், வெம்பக்கோட்டை விஜய கரிசல்குளத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

    அந்த ஆய்வுகள் மூலம் சுமார் 5 ஆயிரம் பொருள்கள் கிடைத்தி ருக்கின்றது என்று சொன் னால் நாம் அனைவரும் ஆச்சரியப்படக்கூடிய ஒரு அற்புதமான சமுதாயம் வைப்பாற்றங்கரையில் வாழ்ந்திருக்கின்றது. கீழடி உள்ளிட்ட நாகரிகங்களுக்கு குறையாத நாகரீகமாக வைப்பங்காற்றங்கரை நாகரீகம் இருந்துள்ளது.

    கீழடியில் உள்ள உலகத்த ரம் வாய்ந்த அருங்காட்சி யகத்தை போல ஒரு அருங்காட்சியகம் விருதுநகர் மாவட்டத்தின் சிறப்புகளை சொல்லும் அளவுக்கு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று முதல்-அமைச்சர் ஒப்புதலு டன் வழங்கி சுமார் ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்து அந்த பணிகள் மிக விரை வில் தொடங்க இருக்கிறது.

    இந்த சமுதாயம் என்னவாக இருந்தது என் பதை இன்றைய சமுதாயம் தெரிந்து கொண்டால் தான், நாளை என்னவாக இருக்க வேண்டும் எப்படிப்பட்ட வர்களாக உருவாக வேண் டும், எதிர்காலம் நமக்கு என்னவாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ளக் கூடிய சமுதாயமாக மாண வர்கள் உருவாக முடியும். அந்த உணர்வினை மாண வர்கள் பெறக் கூடிய வகையில் இந்த கண்காட்சி கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    ×