search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gold Chariot"

    • பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 26-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
    • விழாவின் சிகர நிகழ்ச்சியான தங்க தேரோட்டம் 10-ம் திருநாளான நேற்று நடைபெற்றது.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் உள்ள வானமாமலைபெருமாள் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். மேலும் இத்தலம் நம்மாழ்வரால் 11 பாடல்கள் பாடப்பெற்ற சிறப்பு பெற்றதும் ஆகும். இத்திருத்தலத்தில் மட்டுமே சடாரியில் நம்மாழ்வாரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

    பிரசித்திப் பெற்ற இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் தங்கத் தேரோட்டத்திருவிழாவும், சித்திரை மாதம் பெரிய மரத் தேரோட்டமும் வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. அதன் படி நடப்பாண்டு பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 26-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு. தினமும் பெருமாள் தாயார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்தனர். 5-ம் திருநாள் அன்று கருடசேவைவயும், 7ம் திருநாள் அன்று தங்கச் சப்பரத்தில் பெருமாள் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தங்க தேரோட்டம் 10-ம் திருநாளான நேற்று நடைபெற்றது.

    இதையொட்டி பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், எண்ணெய்காப்பும் நடைபெற்றது. தொடா்ந்து மதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயா் சுவாமிகள் முன்னிலையில் பெருமாள் தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். அதன் பின் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி முழக்கத்துடன் வடம் பிடித்து திருத்தேர் இழுத்தனர். பல்வேறு அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு குளிர் பானங்கள் வழங்கப்பட்டது. ரதவீதிகளை சுற்றி வந்து தேர் நிலைக்கு வந்தடைந்தது.

    ×