search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "god worship"

    ஆலயங்களில் உள்ள இறைவனை வழிபடும் அதே வேளையில், நாம் பிறந்த திதிகளுக்கான தெய்வங்களையும் வழிபாடு செய்து கொள்வது சிறப்பான பலன்களைத் தரும்.
    ஆலயங்களில் உள்ள இறைவனை வழிபடும் அதே வேளையில், நாம் பிறந்த திதிகளுக்கான தெய்வங்களையும் வழிபாடு செய்து கொள்வது சிறப்பான பலன்களைத் தரும். இங்கே திதிகளும், அவற்றுக்கான தெய்வங்களும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவற்றை அறிந்து உங்கள் வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள்.

    சுக்லபட்சம் (வளர்பிறை)

    1. பிரதமை - குபேரன் மற்றும் பிரம்மா
    2. துவதியை - பிரம்மா
    3. திரிதியை - சிவன் மற்றும் கவுரி மாதா
    4. சதுர்த்தி - எமன் மற்றும் விநாயகர்
    5. பஞ்சமி - திரிபுர சுந்தரி
    6. சஷ்டி - செவ்வாய்
    7. சப்தமி - ரிஷி மற்றும் இந்திரன்
    8. அஷ்டமி - காலபைரவர்
    9. நவமி - சரஸ்வதி
    10. தசமி - வீரபத்திரர் மற்றும் தர்மராஜன்
    11. ஏகாதசி - மகா ருத்ரன் மற்றும் மகாவிஷ்ணு
    12. துவாதசி - மகா விஷ்ணு
    13. திரயோதசி - மன்மதன்
    14. சதுர்த்தசி - காளி
    15. பவுர்ணமி - லலிதாம்பிகை

    கிருஷ்ணபட்சம் (தேய்பிறை)

    1. பிரதமை - துர்க்கை
    2. துவதியை - வாயு
    3. திரிதியை - அக்னி
    4. சதுர்த்தி - எமன் மற்றும் விநாயகர்
    5. பஞ்சமி - நாகதேவதை
    6. சஷ்டி - முருகன்
    7. சப்தமி - சூரியன்
    8. அஷ்டமி - மகா ருத்ரன் மற்றும் துர்க்கை
    9. நவமி - சரஸ்வதி
    10. தசமி - எமன் மற்றும் துர்க்கை
    11. ஏகாதசி - மகா ருத்ரன் மற்றும் மகாவிஷ்ணு
    12. துவாதசி - சுக்ரன்
    13. திரயோதசி - நந்தி
    14. சதுர்த்தசி - ருத்ரர்
    15. அமாவாசை - பித்ருக்கள் மற்றும் காளி,

    அவரவர் பிறந்த திதிக்கான தேவதையை வழிபட வாழ்வில் வெற்றி கிட்டும், பிறப்பு தோஷம் நீங்கும்.
    திசைக்கேற்ற தெய்வ வழிபாடுகளை மேற்கொண்டால் தடைக்கற்களை படிக்கற்களாக மாற்ற இயலும். எந்த திசை நடப்பவர்கள் எந்த தெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
    அனைத்து திசை நடப்பவர்களும் முதலில் ஆனைமுகனை வழிபட வேண்டும். அதன்பிறகு...

    சூரியதிசை நடப்பவர்களுக்கு சிவன் வழிபாடு சிறப்பு தரும்.

    சந்திரதிசை நடப்பவர்களுக்கு அம்பிகை வழிபாடு நன்மைதரும்.

    செவ்வாய் திசை நடப்பவர்கள் முருகப்பெருமானை வழிபடுவது முன்னேற்றம் தரும்.

    புதன் திசை நடப்பவர்களுக்கு விஷ்ணு வழிபாடு விருப்பங்களை நிறைவேற்றும்.

    வியாழதிசை நடப்பவர்களுக்கு தென்முகக் கடவுள் வழிபாடு திருப்திதரும்.

    சுக்ரதிசை நடப்பவர்களுக்கு சக்தி, அபிராமி வழிபாடு பலன் தரும்.

    சனிதிசை நடப்பவர்களுக்கு அனுமன் வழிபாடு தடைகளை அகற்றும்.

    ராகுதிசை நடப்பவர்கள் துர்க்கையையும், கேதுதிசை நடப்பவர்கள் விநாயகரையும் வழிபட்டு வரவும்.

    இவை நீங்கலாக செவ்வாய்திசை சனிபுத்தி நடப்பவர்களும், வியாழதிசை சுக்ரபுத்தி நடப்பவர்களும் இதுபோல பகை கிரக திசாபுத்தி ஆதிக்கம் நடை பெறும் பொழுது, வைரவர் வழிபாடு, வராஹி வழிபாடு, பிரதோஷ வழிபாடுகள் நன்மையைத் தரும்.

    மேற்கண்டவாறு திசைக்கேற்ற தெய்வ வழிபாடுகளை மேற்கொண்டால் தடைக்கற்களை படிக்கற்களாக மாற்ற இயலும். 
    ×