search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "glass stone breaking"

    • சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று இரவு வேலூருக்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது.
    • அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர் பஸ்சின் முன்பக்க கண்ணாடியில் கல்லை வீசினார். இதில் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.

    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று இரவு வேலூருக்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சை நாகராஜ் (46) என்பவர் ஓட்டி சென்றார். பஸ்சை வீராணத்தை அடுத்த வலசையூர் பகுதியில் நிறுத்திவிட்டு டிரைவர் டீ குடிக்க சென்றார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர் பஸ்சின் முன்பக்க கண்ணாடியில் கல்லை வீசினார். இதில் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதனை பார்த்த டிரைவர் நாகராஜ் மற்றும் கண்டக்டர் அவரைப் பிடிக்க முயன்றனர்.

    ஆனால் அதற்குள் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் அவர் தப்பி விட்டார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக பஸ் மீது கல் வீசினார் என்று தெரியவில்லை. இது குறித்து நாகராஜ் வீராணம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் அரசு பஸ் மீது கல் வீசிவிட்டு தப்பி ஓடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×