search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "girl asylum"

    கணவனை கை விட்டு காதலனுடன் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த இளம்பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் சின்ன ஓவுலாபுரத்தைச் சேர்ந்தவர் விஜயராம் (வயது 25). இவருக்கும் சிவரஞ்சனி (21) என்பவருக்கும் கடந்த வருடம் தேனியில் திருமணம் நடந்தது. அரசு சார்பில் நடந்த இந்த திருமணத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நடத்தி வைத்தார். பின்னர் அவர்களுக்கு அரசு சார்பில் சீர் வரிசைகளும் வழங்கப்பட்டது.

    திருமணத்துக்கு பிறகு விஜயராம் சென்னைக்கு வேலைக்கு சென்று விட்டார். அவ்வப்போது ஊருக்கு வந்த தனது மனைவியை பார்த்து சென்றுள்ளார்.

    இந்நிலையில் சிவரஞ்சனிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வேன் டிரைவர் அஜித்குமார் (24) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொண்டு தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

    போலீசார் அவர்களது பெற்றோரை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    ×