search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ganja gang"

    • ராஜீவ் காந்தி சிக்னலில் பரபரப்பு
    • கஞ்சா போதையில் இருந்த வாலிபர்கள் டீக்கடையில் இருந்த பாத்தி ரத்தால் கிருஷ்ணகுமாரின் தலையில் தாக்கினர்.

    புதுச்சேரி:

    புதுவை கோரிமேடு குருநகரை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 30). இவர் திருப்பதியில் உள்ள ஏர்போர்ட்டில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு அடுத்த மாதம் 9-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    2 நாள் விடுமுறைக்காக நேற்று இரவு திருப்பதியில் இருந்து பஸ்சில் இன்று அதிகாலை புதுவை வந்தார். புதுவை ராஜீவ் காந்தி சிக்னலில் இறங்கிய கிருஷ்ணகுமார் தனது தம்பி செல்வகுமாருக்கு போன் செய்து பைக் எடுத்து வரும்படி கூறியுள்ளார்.

    தம்பிக்காக காத்திருந்த கிருஷ்ணக்குமாரிடம் அங்கு கஞ்சா போதையில் வந்த 2 இளைஞர்கள் தகராறு செய்துள்ளனர்.

    கிருஷ்ணகுமார் அங்கிருந்து விலகி அங்குள்ள டீ கடைக்கு சென்று உள்ளார்.

    தொடர்ந்து வந்த 2 பேரும் அவரிடம் தகராறு செய்துள்ளனர். அப்போது அங்கு வந்த தம்பி செல்வக்குமாரிடம் நடந்தவற்றை கிருஷ்ண குமார் கூறியுள்ளார்.

    அந்த 2 வாலிபர்களிடமும் சென்று செல்வகுமார் தட்டிக் கேட்கவே அந்த 2 பேரும் செல்வக்குமாரை தாக்கி உள்ளனர். தம்பியை தாக்குவதை பார்த்த கிருஷ்ணகுமார் அதனை தடுத்து நிறுத்த முயன்ற போது கஞ்சா போதையில் இருந்த வாலிபர்கள் டீக்கடையில் இருந்த பாத்தி ரத்தால் கிருஷ்ணகுமாரின் தலையில் தாக்கினர்.

    இதில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதனைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் கோரிமேடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வருவதற்குள் இருவரும் தப்பி ஓடிவிட்டனர். தலையில் பலத்த காயமடைந்த கிருஷ்ணகுமார் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • புதிய டி.ஜி.பி. எச்சரிக்கை
    • 20 லட்சம் வாகனங்கள் ஓடுவதால் போக்குவரத்து பிரச்சினையை சரி செய்ய வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவையின் புதிய டி.ஜி.பியாக சீனிவாஸ் பதவியேற்றார். இதன்பின் மாநில சட்ட ஒழுங்கு நிலவரம் குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் ஏ.டி.ஜி.பி ஆனந்தமோகன், சீனியர் எஸ்.பி நாராசைதன்யா, எஸ்.பிக்கள் ஜிந்தா கோதண்டராமன், மாறன், மோகன்குமார், பக்தவச்சலம், பாஸ்கர், வீரவல்லவன், இன்ஸ்பெக்டர்கள் பலர் கலந்துகொண்டனர். காரைக்கால், மாகி, ஏனாம் போலீசார் வீடியோ கான்பரன்சிங் மூலம் பங்கேற்றனர்.

    டி.ஜி.பி. புதுவையில் பல ஆண்டுக்கு முன்பிருந்த அதே சாலைகள் தான் தற்போதும் உள்ளது. 20 லட்சம் வாகனங்கள் ஓடுவதால் போக்குவரத்து பிரச்சினையை சரி செய்ய வேண்டும்.

    கஞ்சா உட்பட போதைப்பொருட்கள் விற்பனையை முழுமையாக ஒழிக்க வேண்டும். கஞ்சா விற்கும் கும்பலுடன் தொடர்பு வைத்திருக்கும் போலீசாருக்கு குறைந்தபட்ச தண்டனையாகவே டிஸ்மிஸ்தான் இருக்கும் என எச்சரிக்கை விடுத்தார்.

    • விவசாயிகள் எனக்கூறி பல்லடத்தில் வீட்டை வாடகைக்கு எடுத்து தலைமறைவாக இருந்தது தெரிய வந்தது.
    • தலைமறைவாக உள்ள 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள உப்பிலிபாளையம் எள்ளுக்காடு தோட்டத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கேரள மாநிலத்தை சேர்ந்த சபரி, சியாம் என்ற 2 வாலிபர்கள் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்வதாக கூறியுள்ளனர். ஆனால் விவசாயம் எதுவும் செய்யவில்லை. பொதுமக்கள் கேட்ட போது தற்போது சீசன் இல்லை, மழை சீசனில் விவசாயம் செய்வதாக கூறியுள்ளனர்.

    இதையடுத்து அங்குள்ள தோட்டத்து வீட்டில் தங்கி உள்ளனர். அப்போது அருகில் வசிக்கும் சிலருடன் நட்பாக பழகி அவர்களையும் அந்த வீட்டில் தங்க வைத்துள்ளனர். இந்தநிலையில் அந்த கும்பல் மூலம் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் அனுராதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று திடீர் சோதனை நடத்தினர்.

    அப்போது அவர்களிடம் துப்பாக்கி, அரிவாள், வாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்ததை கண்டறிந்தனர். இதையடுத்து அங்கிருந்த கேரளாவை சேர்ந்த ஹாசிம் (வயது 39), அதே பகுதியை சேர்ந்த விபின் தாஸ்(29) ,சிவகங்கையை சேர்ந்த செல்வ கணபதி(27) , அருள்புரம் நவீன் ஆனந்த் (29) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடமிருந்து 5 அரிவாள்,1 துப்பாக்கி. 11 தோட்டாக்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் மற்றும் 200 கிராம் கஞ்சா, 3 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து 4 பேரையும் பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    தலைமறைவாக உள்ள சபரி, ஷியாம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, அவர்கள் மீது கேரளாவில் பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளது. எதிர்தரப்பினர், நீதிமன்றத்தில் வைத்து இவர்களை கொல்ல முயன்றதால் அங்கிருந்து தப்பி, விவசாயிகள் எனக்கூறி பல்லடத்தில் வீட்டை வாடகைக்கு எடுத்து தலைமறைவாக இருந்தது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட 4 பேரையும் கஞ்சா விற்பனை செய்வதற்கும், தங்களது பாதுகாப்புக்கும் வைத்துக்கொண்டதுடன் திருப்பூரில் பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்துள்ளனர். தலைமறைவாக உள்ள 2பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பல்லடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×