search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ganja at home"

    • கொல்லம்பாளையம் பார்வதி கிருஷ்ணா வீதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வியை கைது செய்தனர்.

    ஈரோடு, ஆக. 9-

    ஈரோடு மதுவிலக்கு டி.எஸ்.பி. பவித்ரா உத்தர வின் பேரில் இன்ஸ்பெக்டர் கவிதா லட்சுமி, சப் இன்ஸ்பெக்டர் மோகன சுந்தரம், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், செந்தில் மற்றும் போலீசார் வாகன சோதனை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது கொல்லம்பாளையம் பார்வதி கிருஷ்ணா வீதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் போலீசார் கொல்லம்பாளையம் பார்வதி கிருஷ்ணா வீதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர்.

    அப்போது வீட்டினுள் ஒரு பெண் இருந்தார். அவர் அருகே ஒரு பெரிய பை இருந்தது. சந்தேகத்தின் பேரில் அந்த பையை திறந்து பார்த்தபோது அதில் 100-க்கும் மேற்பட்ட கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. மொத்தம் 3.50 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் அவர் அதே பகுதியை சேர்ந்த செல்வி (48) என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து மதுவிலக்கு போலீசார் அந்த பெண் மற்றும் கஞ்சா பொட்டலங்களை எடுத்துக் கொண்டு சூரம்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வியை கைது செய்தனர். மேலும் கஞ்சா பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    ×