search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gandashashti Completion ceremony"

    • திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள சிவன்மலையில் கந்த சஷ்டி விழா கடந்த 14- ந்தேதி தொடங்கியது.
    • விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் கடந்த 18-ந்தேதி இரவு நடைபெற்றது.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள சிவன்மலையில் கந்த சஷ்டி விழா கடந்த 14- ந்தேதி தொடங்கியது. அன்று சாமி திருமலையில் இருந்து அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் எழுந்தருளினார்.

    அதுசமயம் தினசரி காலை, மாலை நேரங்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் ஆகியன நடைபெற்று வந்தது. இதையொட்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் கடந்த 18-ந்தேதி இரவு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சுப்பிரமணியசாமி, தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

    விழா நிறைவு நிகழ்ச்சியாக மஞ்சள் நீராட்டு நடந்தது. பின்னர் சாமி சப்பரத்தில் திருமலையில் எழுந்தருளினார். சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா நிறைவு பெற்றதையடுத்து படிக்கட்டு வழியாக சுவாமி திருமலையை அடைந்தார்.

    விழாவில் திருப்பூர், கோவை, ஈரோடு போன்ற மாவட்டங்களில் இருந்து சுமார் 3 ஆயிரம் முருக பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×