search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "furlough"

    ஊழல் வழக்கில் சிக்கி சிறை தண்டனை பெற்று வரும் அரியானா மாநில முன்னாள் முதல் மந்திரி ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கு 21 நாள் பரோல் வழங்கப்பட்டது. #OmPrakashChautala
    சண்டிகார்:

    அரியானா மாநில முன்னாள் முதல்-மந்திரி ஓம்பிரகாஷ் சவுதாலா.

    இந்திய லோக்தளம் கட்சியின் தலைவரான அவர் முதல்-மந்திரியாக இருந்த போது லஞ்சம் வாங்கிக் கொண்டு ஆசிரியர்களை நியமித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இது தொடர்பான வழக்கில் சவுதாலா, அவரது மகன் அஜய் சவுதாலா மற்றும் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து விசாரணை கோர்ட்டு கடந்த 2013-ம் ஆண்டு உத்தரவிட்டது.

    ஊழல் வழக்கில் அவர் டெல்லி திகார் ஜெயிலில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

    அரியானா மாநிலத்தில் நடைபெறும் இடைத்தேர்தலுக்காக ஓம்பிரகாஷ் சவுதாலா கடந்த மாதம் பரோல் கேட்டு இருந்தார். நிபந்தனையுடன் அவருக்கு பரோல் கொடுக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அவரது பரோலை டெல்லி அரசு ரத்து செய்தது. இது தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் சவுதாலா தரப்பில் முறையிட்டது.

    அப்போது டெல்லி அரசு நிபந்தனைகளை வாபஸ் பெறுவதாக அறிவித்தது. அரசியல் தொடர்பான பணிகளில் ஈடுபடுவது குறித்த நிபந்தனையை டெல்லி அரசு விலக்கிக்கொண்டது.

    இதை தொடர்ந்து திகார் ஜெயில் நிர்வாகம் ஓம்பிரகாஷ் சவுதாலாவை நேற்று பரோலில் விடுத்தது. அவருக்கு 21 நாள் பரோல் வழங்கப்பட்டது. #OmPrakashChautala
    ×