என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊழல் வழக்கில் சிறையில் இருக்கும் சவுதாலாவுக்கு 21 நாள் பரோல்
Byமாலை மலர்9 Feb 2019 5:57 AM GMT (Updated: 9 Feb 2019 8:14 AM GMT)
ஊழல் வழக்கில் சிக்கி சிறை தண்டனை பெற்று வரும் அரியானா மாநில முன்னாள் முதல் மந்திரி ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கு 21 நாள் பரோல் வழங்கப்பட்டது. #OmPrakashChautala
சண்டிகார்:
அரியானா மாநில முன்னாள் முதல்-மந்திரி ஓம்பிரகாஷ் சவுதாலா.
இந்திய லோக்தளம் கட்சியின் தலைவரான அவர் முதல்-மந்திரியாக இருந்த போது லஞ்சம் வாங்கிக் கொண்டு ஆசிரியர்களை நியமித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பான வழக்கில் சவுதாலா, அவரது மகன் அஜய் சவுதாலா மற்றும் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து விசாரணை கோர்ட்டு கடந்த 2013-ம் ஆண்டு உத்தரவிட்டது.
ஊழல் வழக்கில் அவர் டெல்லி திகார் ஜெயிலில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
அரியானா மாநிலத்தில் நடைபெறும் இடைத்தேர்தலுக்காக ஓம்பிரகாஷ் சவுதாலா கடந்த மாதம் பரோல் கேட்டு இருந்தார். நிபந்தனையுடன் அவருக்கு பரோல் கொடுக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அவரது பரோலை டெல்லி அரசு ரத்து செய்தது. இது தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் சவுதாலா தரப்பில் முறையிட்டது.
அப்போது டெல்லி அரசு நிபந்தனைகளை வாபஸ் பெறுவதாக அறிவித்தது. அரசியல் தொடர்பான பணிகளில் ஈடுபடுவது குறித்த நிபந்தனையை டெல்லி அரசு விலக்கிக்கொண்டது.
இதை தொடர்ந்து திகார் ஜெயில் நிர்வாகம் ஓம்பிரகாஷ் சவுதாலாவை நேற்று பரோலில் விடுத்தது. அவருக்கு 21 நாள் பரோல் வழங்கப்பட்டது. #OmPrakashChautala
அரியானா மாநில முன்னாள் முதல்-மந்திரி ஓம்பிரகாஷ் சவுதாலா.
இந்திய லோக்தளம் கட்சியின் தலைவரான அவர் முதல்-மந்திரியாக இருந்த போது லஞ்சம் வாங்கிக் கொண்டு ஆசிரியர்களை நியமித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பான வழக்கில் சவுதாலா, அவரது மகன் அஜய் சவுதாலா மற்றும் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து விசாரணை கோர்ட்டு கடந்த 2013-ம் ஆண்டு உத்தரவிட்டது.
ஊழல் வழக்கில் அவர் டெல்லி திகார் ஜெயிலில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
அரியானா மாநிலத்தில் நடைபெறும் இடைத்தேர்தலுக்காக ஓம்பிரகாஷ் சவுதாலா கடந்த மாதம் பரோல் கேட்டு இருந்தார். நிபந்தனையுடன் அவருக்கு பரோல் கொடுக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அவரது பரோலை டெல்லி அரசு ரத்து செய்தது. இது தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் சவுதாலா தரப்பில் முறையிட்டது.
அப்போது டெல்லி அரசு நிபந்தனைகளை வாபஸ் பெறுவதாக அறிவித்தது. அரசியல் தொடர்பான பணிகளில் ஈடுபடுவது குறித்த நிபந்தனையை டெல்லி அரசு விலக்கிக்கொண்டது.
இதை தொடர்ந்து திகார் ஜெயில் நிர்வாகம் ஓம்பிரகாஷ் சவுதாலாவை நேற்று பரோலில் விடுத்தது. அவருக்கு 21 நாள் பரோல் வழங்கப்பட்டது. #OmPrakashChautala
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X