search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "from old woman"

    • இதையடுத்து குப்புலட்சுமி நகையை எடுத்து கொண்டு மீண்டும் ஊருக்கு செல்வதற்காக பஸ்சில் ஏறினார்.
    • இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

    கோபி

    கோவை மாவட்டம் சிறுமுகை பகுதியை சேர்ந்தவர் குப்புலட்சுமி (70). இவர் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒரு நகை கடைக்கு நகைகள் விற்பனை செய்ய வந்தார். தொடர்ந்து அவர் 1¼ பவுன் நகைைய விற்பனை செய்ய கொடுத்தார்.

    அப்போது அந்த நகை தரம் குறைவாக இருப்பதாக கூறி கடைக்காரர் நகையை திருப்பி கொடுத்து விட்டார்.

    இதையடுத்து குப்புலட்சுமி நகையை எடுத்து கொண்டு மீண்டும் ஊருக்கு செல்வதற்காக பஸ்சில் ஏறினார்.

    அப்போது தான் கொண்டு வந்த பையை பார்த்த போது அதில் வைத்து இருந்த நகை காணவில்லை. இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

    நகை திருடப்பட்டது தெரிய வந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கம் தேடி பார்த்தும், விசாரித்தும் நகை கிடைக்கவில்லை.

    இது குறித்து குப்புலட்சுமி கோபிசெட்டிபாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×