என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fresh Fish Market"

    • மேயர் சுஜாதா தகவல்
    • மீன் வியாபாரி சங்கத்தினருடன் ஆலோசனை

    வேலூர்:

    வேலூர் கோட்டை அகழியில் இருந்து உபரி நீர் வெளியேறும் கால்வாயை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மேயர் சுஜாதா துணைமேயர் சுனில் குமார் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இதையடுத்து புதிய மீன் மார்க்கெட்டிற்கு சென்ற கலெக்டர் மீன் விற்பனை குறித்து வியாபாரிகளிடம் கேட்டறிந்தார். ஆய்வு குறித்து மேயர் சுஜாதா கூறுகையில்:-

    அகழியில் இருந்து உபரி நீர் வெளியேறும் கால்வாய் முழுவதும் தூர்வாரப்பட்டு சரி செய்யப்படும். மீன் மார்க்கெட் வியாபாரிகள் சாலையோரம் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்து கொள்கின்றனர். இதனால் காலை வேலைகளில் பெங்களூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    எனவே மீன் மார்க்கெட் சாலையோரம் உள்ள தடுப்பு சுவர் முழுவதும் அகற்றப்படும். அதன்பின்னர் தடுப்புச் சுவரை நகர்த்தி வைப்பது குறித்து ஆலோசனை செய்யப்படும்.

    மீன் மார்க்கெட் வெளியே பேவர் பிளாக் கற்கள் பதிக்க மீன் வியாபாரி சங்கத்தினருடன் ஆலோசனை செய்யப்படும் என்றார்.

    ×