என் மலர்
நீங்கள் தேடியது "Freezing Assets"
- தேஜஸ்வி யாதவின் வியாபார கூட்டாளி ஆவார்.
- இதுவரை ரூ.170 கோடி சொத்துக்களை முடக்கப்பட்டுள்ளன.
முன்னாள் மத்திய ரெயில்வே மந்திரியும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லல்லுபிரசாத் யாதவின் முன்னாள் உதவியாளர் அமித் கத்யாலின் ரூ.57 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இவர் பீகார் முன்னாள் துணை முதல்-மந்திரியான தேஜஸ்வி யாதவின் வியாபார கூட்டாளி ஆவார்.
லல்லு மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான ரெயில்வே நிலம் தொடர்பான வழக்கில் கத்யால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.
அவர் மற்றும் அவரது கூட்டாளிகள் வெளிநாடுகளில் ரூ.200 கோடிக்கு மேல் முதலீடு செய்தது தெரியவந்தது.
குருகிராமில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனமான கிரீஸ் ரியல் டெக் நிறுவனம் மற்றும் கத்யால், அவரது குடும்ப உறுப்பினர்கள் என இதுவரை ரூ.170 கோடி சொத்துக்களை முடக்கப்பட்டுள்ளன.
பாரத ஸ்டேட் வங்கி மோசடியில் ஈடுபட்ட நாதெள்ள சம்பத் ஜூவல்லரி நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.328 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. #NathellaJewellery
சென்னை:
சென்னையில் செயல்பட்ட நாதெள்ள சம்பத் ஜூவல்லரி நகைக்கடை நிறுவனங்கள் மீது சி.பி.ஐ. போலீசார் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாரத ஸ்டேட் வங்கியில் கடன் வாங்கி ரூ.380 கோடி மோசடி செய்ததாக வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் அமலாக்கத்துறையும் நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள நாதெள்ள சம்பத் ஜூவல்லரி நகைக்கடை நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.328 கோடி மதிப்புள்ள 37 அசையா சொத்துகளை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. #NathellaJewellery
சென்னையில் செயல்பட்ட நாதெள்ள சம்பத் ஜூவல்லரி நகைக்கடை நிறுவனங்கள் மீது சி.பி.ஐ. போலீசார் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாரத ஸ்டேட் வங்கியில் கடன் வாங்கி ரூ.380 கோடி மோசடி செய்ததாக வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் அமலாக்கத்துறையும் நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள நாதெள்ள சம்பத் ஜூவல்லரி நகைக்கடை நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.328 கோடி மதிப்புள்ள 37 அசையா சொத்துகளை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. #NathellaJewellery






