search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Free Football Training Camp"

    • தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர் மற்றும் தென்காசி சப்-இன்ஸ்பெக்டர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினர்.
    • முகாமில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி கால்பந்து கழகம் சார்பில் கோடைகால இலவச கால்பந்து பயிற்சி முகாம் கடந்த மே 15-ந் தேதி முதல் நேற்று வரை நடைபெற்று முடிந்தது. பயிற்சியின் நிறைவாக பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாண வர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா தென்காசி ஐ.சி.ஐ.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதா னத்தில் நடைபெற்றது.

    தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர் மற்றும் தென்காசி சப்-இன்ஸ்பெக்டர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினர். நிகழ்ச்சியில் தென்காசி கால்பந்து கழக தலைவர் மற்றும் தமிழ்நாடு இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு சங்க துணை தலைவர் சிதம்பரம், பொறியாளர் கார்த்திக், தென்காசி தி.மு.க. நகர பொருளாளர் பரித் மற்றும் தென்காசி தி.மு.க. நகர மாணவர் அணி தலைவர் மைதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். தென்காசி கால்பந்து கழக செயலாளர் பிஸ்வாஸ் வரவேற்று பேசினார்.

    கோடைகால பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது. முடிவில் தென்காசி கால்பந்து கழக ஒருங்கிணைப்பாளர் காமேஷ் நன்றி கூறினார்.

    ×