search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "former Railway minister"

    முன்னாள் மத்திய மந்திரியும் கர்நாடக மாநில மூத்த காங்கிரஸ் தலைவருமான ஜாபர் ஷரிப் உயிர் போகப்போவதை முன்கூட்டியே சொன்ன சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. #FormerRailwayminister #CKJafferSharief
    பெங்களூரு:

    முன்னாள் மத்திய மந்திரியும் கர்நாடக மாநில மூத்த காங்கிரஸ் தலைவருமான ஜாபர் ஷரிப் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

    85 வயதான அவருக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. சமீப ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

    கடந்த 23-ந்தேதி அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் பெங்களூருவில் உள்ள போர்டிஸ் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அதன்பிறகு உடல்நலம் சற்று தேறியது.

    இதயத்தில் உள்ள கோளாறை சரி செய்வதற்காக நேற்று ஆபரே‌ஷன் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக நேற்று மதியம் அவர் இருந்த அறையில் இருந்து ஸ்டிரெச்சரில் ஆபரே‌ஷன் தியேட்டருக்கு அழைத்து சென்றனர்.

    அப்போது தனது பேரன் அப்துல் வகாப் ஷெரீப்பிடம் நான் உயிர் பிழைக்கமாட்டேன். நான் மரணமடைய போகிறேன் என்று கூறினார். பின்னர் ஆபரே‌ஷன் தியேட்டருக்குள் கொண்டு சென்று ஆபரே‌ஷன் டேபிளில் படுக்க வைத்தனர். அப்போது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

    நான் இறந்துவிடுவேன் என்று சொன்ன சில நிமிடங்களில் அவர் மரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது. அவர் உயிர் போகப் போவதை முன்கூட்டியே தெரிந்திருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஜாபர் ஷரிப்பின் உடல் இன்று பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு இன்று முஸ்லிம் மத சம்பிரதாயப்படி அக்கம் செய்யப்பட்டது.

    ஜாபர் ஷரிப் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரசில் செல்வாக்கு பெற்ற நபராக திகழ்ந்தார். இந்திராகாந்தியின் தீவிர விசுவாசியான அவர் இந்திராவின் ஆதரவினால் அரசியலில் பல்வேறு நிலைக்கு உயர்ந்தார்.

    மத்திய மந்திரி பதவியும் வழங்கப்பட்டது.

    அவர் ரெயில்வே மந்திரியாக இருந்தபோது, பல வளர்ச்சி திட்டங்களை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது. #FormerRailwayminister #CKJafferSharief
    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ரெயில்வே துறை முன்னாள் மந்திரியுமான ஜாபர் ஷரிப்(85) பெங்களூரு நகரில் இன்று காலமானார். #FormerRailwayminister #CKJafferSharief
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவர் ஜாபர் ஷரிப். அம்மாநில காங்கிரஸ் அமைப்பில் பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், 1991-95 ஆண்டுகளுக்கிடையில் பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலான மத்திய அரசில் ரெயில்வே துறை மந்திரியாக பதவி வகித்துள்ளார்.

    இவர் இந்த இலாகாவின் மந்திரியாக இருந்தபோதுதான் நாட்டிலுள்ள பல்வேறு ரெயில்வே வழித்தடங்கள் அகலப்பாதைகளாக மாற்றப்பட்டன. இதன் மூலம் நாட்டுக்கு ஏராளமான பணத்தை மிச்சப்படுத்தியதுடன், ரெயில்வே துறையின் வருமானமும் அதிகரித்தது.



    நிஜலிங்கப்பா தலைமையிலான காங்கிரசில் இருந்து இந்திரா காந்தி பிரிந்து இந்திரா காங்கிரஸ் என்ற தனிக்கட்சியை தொடங்கியபோது கர்நாடக மாநிலத்தில் மட்டுமின்றி அகில இந்திய அளவிலும்  இந்திரா காந்தியை ஆதரித்த தலைவர்களில் முக்கியமானவராகவும் ஜாபர் ஷரிப் இருந்தார்.

    இந்நிலையில், சமீபகாலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த ஜாபர் ஷரிப், கடந்த வெள்ளிக்கிழமை ‘ஜும்மா’ தொழுகை முடிந்து காரில் ஏறச்சென்றபோது மயங்கி விழுந்தார். இதைதொடர்ந்து, பெங்களூரு நகரில் உள்ள தனியார் மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி தனது 85-வது வயதில் இன்று காலமானார்.

    ஜாபர் ஷரிப் மறைவிற்கு காங்கிரஸ் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #FormerRailwayminister #CKJafferSharief 
    ×