search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "For the student"

    • 5- ம் வகுப்பு படித்து வருகிறாள்.
    • அதே பள்ளியில் 8- ம் வகுப்பு படிக்கும் மாணவன் நேற்று முன்தினம் பள்ளியில் மாணவியை அடித்துள்ளார்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள பாரகல்லூர் பகுதியை சேர்ந்த மாதையன்- பிரேமா தம்பதியின் மகள் அரசு நடுநிலை பள்ளியில் 5- ம் வகுப்பு படித்து வருகிறாள். அதே பள்ளியில் 8- ம் வகுப்பு படிக்கும் மாணவன் நேற்று முன்தினம் பள்ளியில் மாணவியை அடித்துள்ளார்.

    இதுபற்றி மாணவி தனது பெற்றோரிடம் கூறியதால் மாதையன்-பிரேமா இருவரும் மாணவனின் வீட்டிற்கு சென்று தட்டிக்கேட்டனர். இதில் 2 குடும்பத்தாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இரு தரப்பை சேர்ந்த மணிகண்டன், சேகர், சத்யராஜ், ஜெகதாம்பால், மாலா, கோவிந்தன், மாதையன், பிரேமா, விஜயா, கமலக்கண்ணன் உட்பட 10 பேர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×