search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளியில் 5 -ம் வகுப்பு மாணவியை அடித்த 8-ம் வகுப்பு மாணவன்
    X

    பள்ளியில் 5 -ம் வகுப்பு மாணவியை அடித்த 8-ம் வகுப்பு மாணவன்

    • 5- ம் வகுப்பு படித்து வருகிறாள்.
    • அதே பள்ளியில் 8- ம் வகுப்பு படிக்கும் மாணவன் நேற்று முன்தினம் பள்ளியில் மாணவியை அடித்துள்ளார்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள பாரகல்லூர் பகுதியை சேர்ந்த மாதையன்- பிரேமா தம்பதியின் மகள் அரசு நடுநிலை பள்ளியில் 5- ம் வகுப்பு படித்து வருகிறாள். அதே பள்ளியில் 8- ம் வகுப்பு படிக்கும் மாணவன் நேற்று முன்தினம் பள்ளியில் மாணவியை அடித்துள்ளார்.

    இதுபற்றி மாணவி தனது பெற்றோரிடம் கூறியதால் மாதையன்-பிரேமா இருவரும் மாணவனின் வீட்டிற்கு சென்று தட்டிக்கேட்டனர். இதில் 2 குடும்பத்தாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இரு தரப்பை சேர்ந்த மணிகண்டன், சேகர், சத்யராஜ், ஜெகதாம்பால், மாலா, கோவிந்தன், மாதையன், பிரேமா, விஜயா, கமலக்கண்ணன் உட்பட 10 பேர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×