search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Food is Medicine"

    • இளநீர் உடலில் உள்ள அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.
    • சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது.

    1. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்!

    2. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது, உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.

    3. மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.

    4. ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதற்கு பெரிதும் பயன்படுகிறது.

    5. பூண்டு சாப்பிட்டீர்களென்றால்… உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.

    6. சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம், கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    7. பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.

    8. சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்… நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.

    9 வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.

    10. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்… கண் நோய்கள் நெருங்காது.

    11. சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

    12. சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.

    13. பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.

    14. அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.

    15. தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

    16. பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு… இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.

    17. கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.

    • தூசுக்கள் சுவாசம் மூலம் நுரையீரலுக்குள் ஊருடுவி பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
    • தக்காளி சேர்த்துக்கொள்வது நுரையீரல் நலன் காக்க உதவும்.

    கொரோனா வைரஸ் தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் நுரையீரலின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானது. ஏனெனில் மற்ற உள் உறுப்புகளுடன் ஒப்பிடும்போது சுற்றுச்சூழலுடன் நேரடி தொடர்புள்ள உறுப்பாக நுரையீரல் அமைந்திருக்கிறது. காற்றில் கலந்திருக்கும் தொற்றுகள், தூசுக்கள் சுவாசம் மூலம் எளிதில் நுரையீரலுக்குள் ஊருடுவி பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

    நுரையீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்க உண்ணும் உணவுப்பொருட்களும் உதவிபுரியும். அத்தகையவற்றுள் உணவுப்பொருட்களை ஏன் அவசியம் சாப்பிட வேண்டும் என்று பார்ப்போம்.

    தக்காளி:

    தக்காளியில் இருக்கும் ஆன்டி ஆக்சிடெண்டுகள் காற்றுப் பாதைகளில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கக்கூடியவை. ஆஸ்துமாவை தடுக்கவும் உதவுபவை. தினமும் ஏதாவதொரு வகையில் சமையலில் தக்காளி சேர்த்துக்கொள்வது நுரையீரல் நலன் காக்க உதவும்.

    பூண்டு:

    தினமும் பூண்டு சாப்பிடுவதன் மூலம் நுரையீரலுக்கு போதுமான அளவு அல்லிசின் கிடைக்கும். இது நுரையீரலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை கொன்று நோய்த்தொற்றுகளை தடுக்கக்கூடியது. பூண்டுவை உலரவைத்தும், நெருப்பில் சுட்டும் உட்கொள்ளலாம். ஊறுகாய் தயாரித்தும் ருசிக்கலாம். அதேவேளையில் பூண்டுவை அதிகம் சாப்பிடுவது நெஞ்சரிச்சலை ஏற்படுத்தும் என்பதால் மிதமான அளவில் உட்கொள்ள வேண்டும்.

    அக்ரூட் பருப்புகள்:

    நுரையீரலை சூழ்ந்திருக்கும் காற்றுப் பைகள் சுருங்காமல் இயல்பான அளவை தக்கவைத்துக்கொள்வதற்கு இந்த பருப்புகள் துணை புரியும். மேலும் அக்ரூட்டில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் தசைகளுக்கு வலிமை அளிக்கும். பெரும்பாலும் முதியவர்கள் சுவாசம் சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்வார்கள். அவர்கள் ஒரு கைப்பிடி அக்ரூட் பருப்புகள் சாப்பிட்டு வருவது நல்ல பலனை கொடுக்கும்.

    கிரீன் டீ:

    கிரீன் டீ நுரையீரல் தசைகளை இலகுவாக்கி வீக்கத்தை குறைக்கும் தன்மை கொண்டது. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், நுரையீரல் ஆரோக்கியத்தை பேணவும் தினமும் இரண்டு கப் கிரீன் டீ பருகுவதற்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

    பிரக்கோலி:

    பிரக்கோலியில் இருக்கும் அதிக நார்ச்சத்து நுரையீரலில் ஏற்படும் வீக்கத்தை எதிர்த்து போராட உதவிபுரியும். அத்துடன் சல்போராபேன் என்னும் சேர்மம் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களையும் அழிக்க துணை புரியும்.

    இஞ்சி:

    நுரையீரலில் நச்சுக்கள் படியாமல் இருக்க இஞ்சி உட்கொள்வது சிறந்த வழியாகும். நுரையீரலில் இருக்கும் மாசுக்களை அகற்றும். காற்றுப்பாதையில் ஏற்படும் நெரிசலை குறைக்கவும் செய்யும். கிரீன் டீயுடன் இஞ்சியை சேர்த்தும் ருசிக்கலாம். இஞ்சியை கொதிக்க வைத்த நீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு, தேன் கலந்தும் பருகலாம்.

    முழு தானியங்கள்:

    ஓட்ஸ், பார்லி, கைக்குத்தல் அரிசி உள்ளிட்ட முழு தானியங்களில் ஆன்டி ஆக்சிடெண்டுகள் நிறைந்திருக்கின்றன. மேலும் இவற்றில் உள்ளடங்கி இருக்கும் வைட்டமின் ஏ, செலினியம் போன்றவை நுரையீரலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தக்கூடியவை. மாசுபட்ட காற்றை சுவாசிப்பதன் விளைவாக ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்தவும் செய்யும்.

    பச்சை இலை காய்கறிகள்:

    பச்சை இலை காய்கறிகள் நுரையீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு போதுமான வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன. கீரை, முட்டைக்கோஸ் போன்றவற்றை எளிதாக சமைத்து சாப்பிடலாம்.

    ஆப்ரிகாட்:

    இந்த பழத்தில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இது சுவாச குழாய்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க வழிவகை செய்யும். நோய்த்தொற்று அபாயத்தையும் குறைக்கும்.

    சிட்ரஸ் பழங்கள்:

    ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை, சாத்துக்குடி போன்ற பழங்களில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. இவை சுவாச நோய்த்தொற்றுகளுக்கு எதிராக போராடி, சுவாசத்தை மேம்படுத்தக்கூடியவை. இவற்றை காலை அல்லது மாலை நேர சிற்றுண்டியாகவோ அல்லது ஜூஸாகவோ தயாரித்து சுவைக்கலாம்.

    ×