search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Florence Nightingale awards"

    • அர்ப்பணிப்பு, கடமை மற்றும் சமூக சேவைக்காக 30 செவிலியர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
    • மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா, இணை மந்திரி எஸ்.பி.பாகெல் கலந்து கொண்டனர்.

    புதுடெல்லி:

    நாடு முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில், சிறப்பாக பணியாற்றும் செவிலியர்களைத் தேர்வு செய்து அவர்களை கவுரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதை மத்திய அரசு வழங்கி வருகிறது. இது செவிலியர்களுக்கான மிக உயரிய விருது ஆகும்.

    அவ்வகையில் 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளுக்கான புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகள் இன்று வழங்கப்பட்டன. விருது வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. தேர்வு செய்யப்பட்ட செவிலியர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி வாழ்த்தினார்.

    செவிலியர் பணியில் அர்ப்பணிப்பு, கடமை மற்றும் சமூக சேவைக்காக 30 செவிலியர்களுக்கு இந்த மதிப்புமிக்க விருது வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா, இணை மந்திரி எஸ்.பி.பாகெல் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    • புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதானது செவிலியர்களுக்கான மிக உயரிய விருது ஆகும்
    • ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி வாழ்த்தினார்.

    புதுடெல்லி:

    நாடு முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில், சிறப்பாகப் பணியாற்றும் செவிலியர்களைத் தேர்வு செய்து அவர்களை கவுரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதை மத்திய அரசு வழங்கி வருகிறது. இது செவிலியர்களுக்கான மிக உயரிய விருது ஆகும்.

    அவ்வகையில் 2021ம் ஆண்டுக்கான புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகள் இன்று வழங்கப்பட்டன. விருது வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. தேர்வு செய்யப்பட்ட செவிலியர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி வாழ்த்தினார்.

    சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு, சிறந்த சேவை புரிந்த நர்சுகளுக்கு மத்திய அரசின் சார்பில் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகள் வழங்கப்பட்டன. #InternationalNursesDay #nurses
    புதுடெல்லி:

    சிறப்பாக மருத்துவ சேவை புரியும் செவிலியர்களுக்கு மத்திய அரசு சார்பில் மதிப்புமிக்க ‘பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது’ வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச செவிலியர் தினமான மே 12-ம் தேதி ஜனாதிபதி மாளிகையில் விருது வழங்கும் விழா நடைபெறும்.

    அவ்வகையில் இந்த ஆண்டுக்கான விருது பெற விரும்புவோரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, 35 நர்சுகள் தேர்வு செய்யப்பட்டனர்.



    இந்நிலையில் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்றது. விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா ஆகியோர் விருதுகளை வழங்கி வாழ்த்தினார்கள்.

    நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசும்போது, செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தங்கள் துறையில் அளித்து வரும் பங்களிப்பை வெகுவாகப் பாராட்டினார். மேலும், நர்சிங் துறையை மேலும் வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.  #InternationalNursesDay #nurses

    ×