search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "flies"

    • தனியாருக்கு சொந்தமான முட்டை கோழிப் பண்ணை உள்ளது.
    • வயிற்றுக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் ஏற்படுகின்றன.

    தாராபுரம்:

    தாராபுரம் புளியமரத்துபாளையம் கிராமத்தைச் சுற்றி சின்னப்புத்தூா், கெத்தல்ரேவ், கோவிந்தாபுரம், தும்பநாயக்கன்பாளையம், தொண்டாமுத்தூா், நஞ்சுண்டாபுரம், காளிபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.

    இந்நிலையில், நஞ்சுண்டாபுரத்தில் இருந்து புளியமரத்துப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள தனியாா் கோழிப்பண்ணையில் இருந்து வெளியேறும் ஈக்களால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருவதாகப் புகாா் தெரிவித்துள்ளனா்.

    இது குறித்து அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

    சின்னபுத்தூா் கிராமத்துக்குட்பட்ட நஞ்சுண்டபுரத்தில் இருந்து புளியமரத்துபாளையம் செல்லும் சாலையில் தனியாருக்குச் சொந்தமான முட்டை கோழிப் பண்ணை உள்ளது.இந்த கோழிப் பண்ணையில் உற்பத்தியாகும் ஈக்கள் அருகில் உள்ள கிராமங்களில் பரவி வருகிறது. இது தொடா்பாக மாவட்ட கலெக்டர்மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் பலமுறை புகாா் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.ஈ தொல்லையால் வீடுகளில் உணவு அருந்தவும், தூங்கவும் முடிவதில்லை.

    மேலும், ஈ தொல்லையால் குழந்தைகளுக்கு வயிற்றுக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் ஏற்படுகின்றன. அனுமதியில்லாமல் செயல்பட்டு வரும் கோழிப் பண்ணையை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    ×