என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fish prices"

    சென்னை-புறநகர் பகுதியில் மீன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    மாமல்லபுரம்:

    ஆழ்கடலில் மீன் பிடிக்க தடை காலம் அமலில் இருக்கிறது.

    இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மீன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

    வஞ்சிரம் மீன் கிலோ ரூ. 1000, வவ்வால் ரூ. 750, சங்கராரூ. 350, நண்டு ரூ. 300, இறால் ரூ. 400, பாறை ரூ. 800, கடமா ரூ. 400, அயிலை ரூ. 300 என்று விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    இதை சரி செய்யும் வகையில் கேரளா, ஆந்திரா, ஓடிசா, கோவா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து மீன்கள் கொண்டு வர ஏற்பாடு நடந்து வருகிறது. இதன் மூலம் விலையை குறைத்து விற்பனையை அதிகப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் 45 நாட்கள் தடைக்காலத்தை 61 நாட்களாக உயர்த்தியதால் மாமல்லபுரம், கோவளம், கல்பாக்கம், மரக்காணம் சுற்று வட்டார கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் ஆழ்கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் போதிய வருவாய் இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ×