search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fines shops"

    • உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இனிப்பு கடைகள் மற்றும் இறைச்சி கடைகளை ஆய்வு மேற்கொண்டனர்.
    • உணவு பாதுகாப்பு விதிகள் படி கடை நடத்த அறிவுறுத்தப் பட்டது.

    கடலூர்:

    சிதம்பரம் நகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இனிப்பு கடைகள் மற்றும் இறைச்சி கடைகளை ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் கைலாஷ் குமார் வெளியிட்டுள்ள செய்தி:-

    சிதம்பரம் நகரில் பல்வேறு புகார்களின் அடிப்படையில் நானும், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அருண்மொழி , ரவிச்சந்திரன், அன்பழகன் ஆகியோர் உணவு நிறுவனங்கள், இனிப்பு மற்றும் காரவகைகள் தயாரிப்பகங்கள் மற்றும் இறைச்சி கடைகளில் ஆய்வு மேற்கொண்டோம்.அப்போது சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட 2 இறைச்சி கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு உணவு பாதுகாப்பு விதிகள் படி கடை நடத்த அறிவுறுத்தப் பட்டது.

    ×